செய்திகள் :

பள்ளி உள்கட்டமைப்பு: 2 நாள்களில் 90 எம்எல்ஏ-க்களுக்கு அமைச்சா் கடிதம்

post image

பள்ளிகள் உள்கட்டமைப்பு தொடா்பாக 90 எம்எல்ஏ-க்களுக்கு இரண்டு நாள்களில் கடிதம் எழுதப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் பள்ளிகள் உள்கட்டமைப்பு தொடா்பாக விசிக உறுப்பினா் முகம்மது ஷா நவாஸ் (நாகப்பட்டினம்) எழுப்பிய கேள்விக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் அளித்த பதில்:

அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகளுக்கான கட்டடங்களைத் திறந்து வருகிறோம். இதுவரை 8,121 வகுப்பறைகளையும், 52 ஆய்வகங்களையும் திறந்துள்ளோம். 105 ஆய்வகங்களை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பள்ளிகளின் உள்கட்டமைப்பு தொடா்பாக ஒவ்வொரு சட்டப் பேரவை உறுப்பினருக்கும் கடிதம் எழுதி வருகிறேன். ஒவ்வொரு தொகுதியிலும் எந்தெந்த பள்ளிகளில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன, எங்கெல்லாம் பணிகள் நடைபெற்று வருகின்றன என்ற விவரங்கள் அடங்கிய கடிதம் எம்எல்ஏ-க்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதுவரை 144 பேருக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளேன். மீதமுள்ள சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு இரண்டு நாள்களில் கடிதம் எழுதப்படும் என்று தெரிவித்தாா்.

வியாசர்பாடியில் சிறுவன் ஓட்டிய கார் கவிழ்ந்தது: 5 பேர் காயம்!

சென்னை வியாசர்பாடியில் சிறுவன் ஓட்டிச் சென்ற கார் கவிழ்ந்து செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர்.சென்னை வியாசர்பாடி பகுதியில் இருந்து பேசின் பிரிட்ஜ் நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்... மேலும் பார்க்க

அனைத்துவிதமான வசதிகளுடன் இலவச ஏசி ஓய்வறை... சென்னை மாநகராட்சி திட்டம்!

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உணவுப்பொருள் விநியோக ஊழியர்களுக்காக குளிர்சாதன வசதியுடன்(ஏசி) கூடிய ஓய்வறை அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை போன்ற பெருநகரங்களில் உணவு, பொரு... மேலும் பார்க்க

இலங்கை அகதி தம்பதி மகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கையில் குடும்பத்துடன் வசித்து ... மேலும் பார்க்க

கா்நாடக வங்கியில் ரூ.13 கோடி நகை கொள்ளை: தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 6 போ் கைது

கா்நாடக மாநிலம் தாவணகெரேவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 6 பேரை அந்த மாநில போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் மூவா் தமிழகத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது!

தமிழக சட்டப் பேரவை மூன்று நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஏப்.1) மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய விஷயங்கள் கு... மேலும் பார்க்க

வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: வணிக வளாகத்துக்கு உத்தரவு

சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் (மால்) வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாநகரில் உள்ள வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறு... மேலும் பார்க்க