செய்திகள் :

எல்லையைக் கடந்து பரவும் தொற்றினால் 10 லட்சம் பேருக்கு ஆபத்து! காப்பாற்றுமா அரசின் திட்டம்!

post image

கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் வேகமாகப் பரவி வரும் காலரா நோயினால் சுமார் 10 லட்சம் பேர் அபாயத்திலுள்ளதாகக் கூறப்படுகின்றது.

தெற்கு சூடான் நாட்டுடனான எல்லையில் எத்தியோபியாவின் தென் மேற்கிலுள்ள காம்பெல்லா மாகாணத்தின் அகோபோ மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் முறையாக காலரா நோய் தொற்றானது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தற்போது அம்மாகாணத்தில் எட்டு மாவட்டங்கள் மற்றும் 4 அகதிகள் முகாம்களில் பரவியுள்ள காலரா தொற்றை உடனடியாகத் தடுக்க, உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட மனிதாபிமான அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், காம்பெல்லா பகுதி மற்றும் அங்குள்ள அகதிகள் முகாமில் வாழும் மக்களுக்கு காலரா தொற்று ஏற்படக் கூடிய அபாயமுள்ளதாகக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டு அரசு சுமார் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்து திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, கடந்த மார்ச் 30 அன்று எத்தியோப்பியாவின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் காம்பெல்லா மாகாணத்தின் அனைத்து மண்டலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணியானது வரும் வாரம் முழுவதும் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் மெக்தெஸ் தாபா கூறுகையில், இந்த நோயைத் தடுக்க மக்கள் அனைவரும் காலரா தடுப்பூசி செலுத்துவதுடன் சுற்றுச்சூழல் மற்றும் தனிமனித சுத்ததைக் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இருப்பினும், எத்தியோபியாவின் அண்டை நாடான தெற்கு சூடானில் கடந்த 2024 ஆம் அண்டு முதல் காலரா நோய் தொடர்ந்து பரவி வருகின்றது. மேலும், அந்நாட்டில் அரசுக்கும் கிளர்ச்சிப்படைகளுக்கு இடையிலான மோதலினால் ஏராளமான மக்கள் தெற்கு சூடானை விட்டு வெளியேறி எத்தியோப்பியாவில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இதனால், தற்போது அந்நாட்டில் பரவி வரும் புதிய அலையானது மேல் நைல் மாநிலத்தைக் கடந்து எத்தியோப்பியாவின் காம்பெல்லாவில் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:பலியாகப் போகும் 3 லட்சம் பேர்? ஜப்பானுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து!

3 மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம்! ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்பு!

3 முக்கிய மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்றுள்ளது. மத்திய ஆசியாவைச் சேர்ந்த தஜிகிஸ்தான் குடியரசு, உஸ்பெகிஸ்தான் குடியரசு மற்றும் கிர்கிஸ்தான் குடியரசு ஆகிய நாடுக... மேலும் பார்க்க

ஆட்சிக் கவிழ்ப்பின்போது கைதான முக்கிய அதிகாரிகளை விடுவித்த நைஜர் ராணுவ அரசு!

நைஜர் நாட்டின் ராணுவ அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு கைது செய்த முக்கிய அரசு மற்றும் ராணுவ அதிகாரிகளை விடுதலை செய்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் கடந்த 2023 ஆம் ஆண்டு மக்களாட்சி கவிழ்க்கப்பட்டு ராண... மேலும் பார்க்க

யூத மதகுருவைக் கொலை செய்த 3 பேருக்கு மரண தண்டனை!

ஐக்கிய அரபு அமீரகத்தில் யூத மதகுருவின் கொலை வழக்கில் கைதான 3 உஸ்பெகிஸ்தான் நாட்டினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மால்டோவா மற்றும் இஸ்ரேல் நாட்டு குடியுரிமைப் பெற்றவர் ஸ்வி கோகன் (வயது 28) , இவ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: ரமலான் விடுமுறையினால் அகதிகளை நாடு கடத்துவதில் தாமதம்!

பாகிஸ்தானில் ரமலான் விடுமுறையினால் லட்சக்கணக்கான ஆப்கன் அகதிகள் நாடு கடத்தப்படுவதற்கான காலக்கெடுவானது தாமதப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் தஞ்சமடைந்துள்ள லட்சக்கணக்கான ஆப்கன் அகதிகளுக்கு அந்ந... மேலும் பார்க்க

உள்நாட்டு பாதுகாப்பு கருதி 2 சிறார்களைக் கைது செய்த சிங்கப்பூர்! காரணம் என்ன?

சிங்கப்பூரில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு சிறுமி மற்றும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் நாட்டில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவளித்த 1... மேலும் பார்க்க

ரூ.14 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரூ.14 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த 2 பெண் நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மண்டலா மாவட்டத்தில் பிச்சியா காவல் நிலையத்திற்குட்பட்ட ... மேலும் பார்க்க