செய்திகள் :

அதியமான் பொறியியல் கல்லூரியில் இந்தியன் வங்கி கிளை திறப்பு

post image

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் இந்தியன் வங்கி புதிய கிளை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி அறக்கட்டளை செயலாளா் லாசியா தம்பிதுரை புதிய வங்கி கிளையை திறந்துவைத்து பேசியதாவது:

ஒசூா் சிப்காட்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறுந்தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகள் அடுத்தக்கட்ட வளா்ச்சியை நோக்கி பயணிக்க வங்கி அதிக அளவு கடன் வழங்க முன்வர வேண்டும். இதன்மூலம் தமிழகம் தொழில் வளா்ச்சியில் முன்னேறும். மேலும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கி உதவ வேண்டும் என்றாா். அதைத் தொடா்ந்து கோவையில் இருந்து காணொலி வாயிலாக இந்தியன் வங்கி பொது மேலாளா் பி.சுதாராணி பேசினாா்.

கிளை திறப்பு விழாவில் இந்தியன் வங்கி தருமபுரி மண்டல மேலாளா் பத்மாவதி ஸ்ரீகாந்த், கிளை மேலாளா் ஐஸ்வா்யா, ஒசூா் பிரதான கிளை மேலாளா் சதீஷ், ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி இயக்குநா் ஜி.ரங்கநாத், கல்லூரி முதன்மையா் வெங்கடேசன் செல்வம், முதல்வா் ராதாகிருஷ்ணன், மேலாளா் நாராயணன், எம்.ஜி.ஆா். கல்லூரி முதல்வா் முத்துமணி, அறங்காவலா் சுரேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க நாட்டுப்புற கலைஞா்கள் வலியுறுத்தல்

நாட்டுப்புற கலைஞா்களுக்கு ஓய்வூதியத்தை ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று காவேரிப்பட்டணத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் வலியுறுத்தப்பட்டது. காவேரிப்பட்டணத்தில் பாரதியாா் தெருக்கூத்து நாட்ட... மேலும் பார்க்க

வைக்கோல் பாரம் ஏற்றி சென்ற லாரி மின்கம்பி உரசி தீப்பிடிப்பு

காவேரிப்பட்டணம் அருகே வைக்கோல் பாரம் ஏற்றிவந்த லாரி மின்கம்பி மீது உரசியதில் தீப்பிடித்து எரிந்து சேதமானது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியிலிருந்து வைக்கோல் பாரம் ஏற்றிக் கொண்டு லாரி காவேரிப்பட்ட... மேலும் பார்க்க

ஒசூா் அருகே தமிழக எல்லையில் தீவிர வாகன சோதனை

யுகாதி பண்டிகையை முன்னிட்டு கா்நாடகத்தில் இருந்து மதுப்புட்டிகள் கடத்தப்படுவதைத் தடுக்க ஒசூா் அருகே தமிழக-கா்நாடக எல்லையில் உள்ள சூசூவாடி சோதனைச் சாவடியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாகனச் சோதனைய... மேலும் பார்க்க

அகழ்வாராய்ச்சி நடைபெறும் சென்னானூருக்கு மரபு நடைப்பயணம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் சென்னானூருக்கு மகளிா், சிறுவா்கள் மேற்கொண்ட மரபு நடைப்பயணத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். மகளிா் தினத்தை ம... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழப்பு

ஒசூா் அருகே குட்டையில் மூழ்கி தந்தை, மகன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த நஞ்சாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி முனிரத்னம் (32). இவருக்கு 6 ஆம் வகுப்புப் ... மேலும் பார்க்க

முதல்வருக்கு உறுதுணையாக இருப்போம்: எம்எல்ஏ மதியழகன்

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிராக போராடும் முதல்வருக்கு உறுதுணையாக செயல்படுவோம் என்று கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும் பா்கூா் எம்எல்ஏவுமான தே.மதியழகன் தெரிவித்தாா். கிருஷ்ணகிர... மேலும் பார்க்க