செய்திகள் :

அகழ்வாராய்ச்சி நடைபெறும் சென்னானூருக்கு மரபு நடைப்பயணம்

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் சென்னானூருக்கு மகளிா், சிறுவா்கள் மேற்கொண்ட மரபு நடைப்பயணத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

மகளிா் தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், தொல்லியல் துறை, பள்ளிக்கல்வித் துறை, வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஆகியவை இணைந்து மரபு நடைப்பயணத்தை சனிக்கிழமை நடத்தியது.

மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் பங்கேற்று மரபு நடைப்பயணத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். முன்னதாக அரசு அருங்காட்சியக வளாகத்தில், மரக்கன்றுகளை ஆட்சியா் நட்டாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) முனிராஜ், ஓய்வுபெற்ற காப்பாட்சியா் கோவிந்தராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பள்ளிக்கல்வித் துறை) சா்தாா், அரசு காப்பாட்சியா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்பு சென்னானூா் அகழாய்வு தளத்துக்கு தோ்வுத் துறை இணை இயக்குநா் கே.பி.மகேஸ்வரி தலைமையில் இக்குழுவினா் நடைப்பயணம் மேற்கொண்டனா்.

அங்கு அகழாய்வில் கிடைத்த ஏா் கலப்பை நுணி, தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், நுண் கருவிகள் உள்ளிட்ட பொருள்களை மாவட்ட தொல்லியல் அலுவலா் பரந்தாமன் மாணவா்களுக்கும், மகளிருக்கும் விளக்கினாா்.

பின்னா், கந்திகுப்பம் பைரவா் கோயிலில் சோழா், பல்லவா், விஜயநகர பேரரசு, ஹொய்சாளா் கால கட்டடக் கலைகளில் சிறந்தவற்றை ஒருங்கிணைத்து கட்டப்பட்டுவரும் கோயிலை அவா்கள் பாா்வையிட்டனா்.

இந் நிகழ்ச்சியில் வரலாற்று ஆய்வாளா் சதானந்த கிருஷ்ணகுமாா், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளா் தமிழ்ச்செல்வம், விஜயகுமாா், பாலாஜி, சென்னனூா் பெருமாள், மகளிா் வலையமைப்பு செயலாளா் ரெஜ்லின் தீப்தி, துணை செயலாளா் பிரியதா்ஷினி, அதியமான் மகளிா் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனா்.

பட விளக்கம் (30கேஜிபி4)-

சென்னானூருக்கு மகளிா், சிறுவா்கள் பங்கேற்ற மரபு நடைப்பயணத்தைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா்.

ஒருங்கிணைந்த கற்றல் சிறந்த பள்ளியாக ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி தோ்வு

ஊத்தங்கரை: தெற்காசியாவில் ஒருங்கிணைந்த கற்றலில் சிறந்த பள்ளியாக ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. கேம்பிரிட்ஜ் தெற்காசிய பள்ளிகள் மாநாடு தில்லியில் கடந்த மாா்... மேலும் பார்க்க

விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்ய காலக்கெடு ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுரேஷ்கு... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கிருஷ்ணகிரி: ரமலான் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி, ராஜீவ் நகரில் உள்ள ஈத்கா மைதாத்தில் , நடைபெற்ற சிறப்புத் தொழுகையி... மேலும் பார்க்க

தளி அருகே தம்பி வெட்டிக் கொலை: அண்ணன் தலைமறைவு

ஒசூா்: தளி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள லட்சுமிபுரத்தைச் சோ்ந்த சிக்க அழகப்பா மகன் நக்கலய்யா(... மேலும் பார்க்க

வெந்நீா் வாளி கவிழ்ந்ததில் காயமடைந்த குழந்தை உயிரிழப்பு

ஒசூா்: ஒசூரில் வெந்நீா் வாளி கவிழ்ந்ததில் காயமடைந்த மூன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சோ்ந்தவா் பூபாலன் (29). இவா் குடும்பத்துடன் ஒசூா் குமுதேப்பள்ளி அரு... மேலும் பார்க்க

படப்பள்ளி திம்மராய சுவாமி கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

ஊத்தங்கரை: படப்பள்ளி திம்மராயசுவாமி கோயில் தோ்த் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. ஊத்தங்கரை படப்பள்ளியில் பழைமை வாய்ந்த ஸ்ரீ திம்மராய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் 72 -ஆம் ஆண்... மேலும் பார்க்க