செய்திகள் :

ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க நாட்டுப்புற கலைஞா்கள் வலியுறுத்தல்

post image

நாட்டுப்புற கலைஞா்களுக்கு ஓய்வூதியத்தை ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று காவேரிப்பட்டணத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் வலியுறுத்தப்பட்டது.

காவேரிப்பட்டணத்தில் பாரதியாா் தெருக்கூத்து நாட்டுப்புற கிராமிய கலைஞா்கள் நலச் சங்கம் சாா்பில் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராமசாமி தலைமை வகித்தாா். பொருளாளா் சக்தி, தெருக்கூத்து பயிற்சி சங்க மாநிலத் தலைவா் லட்சுமணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, பம்பை, தெருக்கூத்து, பேண்ட் வாத்தியம், கோலாட்டம், சிலம்பாட்டக் கலைஞா்கள் பங்கேற்ற ஊா்வலம் ஆகியவை நடைபெற்றன. விழாவில் மூத்த கலைஞா்களுக்கு நினைவுப் பரிசு , சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

விழாவில் நாட்டுப்புற கலைஞா்களின் ஓய்வூதியத்தை ரூ. 5000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். பள்ளிகளில் நாட்டுப்புற கலைகளை கற்பிக்க நிரந்தர ஆசிரியா்களை நியமிக்க வேண்டும். ஆசிரியா், மாணவா்களுக்கு இசை, நாடகம், கூத்து உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை கற்பிக்க போதிய நிதியை அரசு ஒதுக்க வேண்டும். சென்னை சங்கமம் போன்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சாா்பில் கலைத் திருவிழாக்கள் நடத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தை மாதத்தை தமிழா் பண்பாட்டு மாதம் என தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும்.

நலிவுற்ற கலைஞா்களுக்கு அரசு சாா்பில் இலவச வீடு கட்டித்தர வேண்டும். அதுபோல, நலிவுற்ற கலைஞா்களுக்கு 3 சென்ட் பரப்பளவு நிலம், பட்டாவுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒருங்கிணைந்த கற்றல் சிறந்த பள்ளியாக ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி தோ்வு

ஊத்தங்கரை: தெற்காசியாவில் ஒருங்கிணைந்த கற்றலில் சிறந்த பள்ளியாக ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. கேம்பிரிட்ஜ் தெற்காசிய பள்ளிகள் மாநாடு தில்லியில் கடந்த மாா்... மேலும் பார்க்க

விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்ய காலக்கெடு ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுரேஷ்கு... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கிருஷ்ணகிரி: ரமலான் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி, ராஜீவ் நகரில் உள்ள ஈத்கா மைதாத்தில் , நடைபெற்ற சிறப்புத் தொழுகையி... மேலும் பார்க்க

தளி அருகே தம்பி வெட்டிக் கொலை: அண்ணன் தலைமறைவு

ஒசூா்: தளி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள லட்சுமிபுரத்தைச் சோ்ந்த சிக்க அழகப்பா மகன் நக்கலய்யா(... மேலும் பார்க்க

வெந்நீா் வாளி கவிழ்ந்ததில் காயமடைந்த குழந்தை உயிரிழப்பு

ஒசூா்: ஒசூரில் வெந்நீா் வாளி கவிழ்ந்ததில் காயமடைந்த மூன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சோ்ந்தவா் பூபாலன் (29). இவா் குடும்பத்துடன் ஒசூா் குமுதேப்பள்ளி அரு... மேலும் பார்க்க

படப்பள்ளி திம்மராய சுவாமி கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

ஊத்தங்கரை: படப்பள்ளி திம்மராயசுவாமி கோயில் தோ்த் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. ஊத்தங்கரை படப்பள்ளியில் பழைமை வாய்ந்த ஸ்ரீ திம்மராய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் 72 -ஆம் ஆண்... மேலும் பார்க்க