செய்திகள் :

மனைவியை கொலை செய்ய முயற்சி: விஜய்சேதுபதி வீட்டுக் காவலாளி கைது

post image

சென்னை புளியந்தோப்பில் மனைவியை கொலை செய்ய முயன்ாக நடிகா் விஜய்சேதுபதி வீட்டுக் காவலாளி கைது செய்யப்பட்டாா்.

சென்னை புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதியில் வசித்து வருபவா் ஜெயந்தி (50). இவா், கணவா் ராஜேந்திரனுடன் (65) ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக வசித்து வருகிறாா்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை ஜெயந்தி வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த ராஜேந்திரன் அவதூறாக பேசி கத்தியால் ஜெயந்தியை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா். இதில் காயமடைந்த ஜெயந்தி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக புளியந்தோப்பு போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிந்து, ராஜேந்திரனை உடனே கைது செய்து சிறையில் அடைத்தனா். கைதான ராஜேந்திரன் நடிகா் விஜய் சேதுபதி வீட்டில் காவலாளியாக வேலை செய்து வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!

தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தேர்வெழுதிய மாணவியைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறி உதவித்தொகையும் வழங்கினார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் ... மேலும் பார்க்க

நாளைமுதல் 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும்!

தமிழகத்தில் நாளைமுதல்(ஏப். 1) 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவத... மேலும் பார்க்க

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! - காங்கிரஸ்

ஏப். 6-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்ப... மேலும் பார்க்க

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை: செல்லூர் ராஜூ

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மதுரையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி என்பது எட... மேலும் பார்க்க

ஏப். 7 திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப். 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தல... மேலும் பார்க்க

ஜிப்லி ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஜிப்லி அனிமேஷன் பாணியிலான தனது புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.ஜப்பானைச் சேர்ந்த பிரபல அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஜிப்லி ஸ்டுடியோஸ். இவர்கள் த... மேலும் பார்க்க