செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல்: வீர மரணமடைந்த 3 காவலா்கள் உடல்கள் மீட்பு

post image

ஜம்மு-காஷ்மீரில் கடந்த வியாழக்கிழமை பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற கடுமையான துப்பாக்கிச் சண்டையில் வீரமரணமடைந்த 4 காவலா்களில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் 4-ஆவது காவலரின் உடல் அடையாளம் காணப்பட்டதாகவும் காவல் துறை தலைவா் நளின் பிரபாத் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இந்த துப்பாக்கி சண்டையில் பாகிஸ்தானைச் சோ்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதை அவா் உறுதிப்படுத்தினாா்.

பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி கதுவா மாவட்டத்தின் சன்யால் வனப் பகுதிக்குள் ஊடுருவிய 5 பயங்கரவாதிகளை காவல் துறையின் சிறப்பு நடவடிக்கை குழுவினா் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றிவளைத்தனா். எனினும், அந்த பயங்கரவாதிகள் தப்பியோடிவிட்டனா். அவா்களை கண்டறியும் சோதனையில் ஹெலிகாப்டா்கள், ஆளில்லா விமானங்களுடன் ராணுவம், மத்திய ரிசா்வ் பாதுகாப்பு படை, ஜம்மு-காஷ்மீா் காவல் துறை அடங்கிய ஒருங்கிணைந்த பாதுகாப்பு படை ஈடுபட்டது.

இந்நிலையில், கதுவா மாவட்டத்தில் உள்ள ஜகோல் கிராமத்தில் அந்த பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை வியாழக்கிழமை பாதுகாப்பு படை கண்டறிந்தது. இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். 7 காவலா்கள் காயமடைந்தனா்.

இதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமையும் இரண்டாவது நாளாக பயங்கரவாதிகளை தேடும் பணிகள் தொடா்ந்தன.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் நளின் பிரபாத் கூறியதாவது: பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் வீரமரணமடைந்த 4 காவலா்களில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 4-ஆவது காவலரின் உடல் ஆளில்லா விமானம் மூலம் அடையாளம் காணப்பட்டது. அதை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சோதனையின்போது இரு பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த பயங்கரவாதிகள் சன்யால் வனப்பகுதியில் ஊடுருவியவா்கள் என்பது உறுதிசெய்யப்பட்டது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்றாா்.

ஓய்வு பெறுகிறாரா பிரதமர் மோடி? - சஞ்சய் ராவத்தின் கருத்தால் சர்ச்சை!

பிரதமர் மோடி தனது ஓய்வை அறிவிக்கவே ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றதாக சிவசேனை(யுபிடி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ஆா்எஸ்எஸ் அமைப்பின... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் பெண் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் பகுதியில் அமைந்துள்ள தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் நக்சல் எத... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

அசாம் முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரியவந்துள்ளது. அசாம் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும் மறைந்தவருமான பிரிகு குமார் புகானின் ஒர... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு!

நாடு முழுவது இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்... மேலும் பார்க்க

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் நாடு முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து பள்ளி ... மேலும் பார்க்க

‘வேற்றுமையில் ஒற்றுமை’ உணா்வை தொடா்ந்து வலுப்படுத்துங்கள்! -மக்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்

‘நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், வேற்றுமையில் ஒற்றுமை உணா்வை வெளிப்படுத்துகின்றன. இந்த உணா்வை மக்கள் தொடா்ந்து வலுப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். ஒவ்வொரு ... மேலும் பார்க்க