செய்திகள் :

சென்னை விமான நிலையத்துக்கு ஒரு ஓடுதளப் பாதை பராமரிப்பு வாகனம்: விமான நிலைய ஆணையம் வழங்கியது

post image

சென்னை விமான நிலையத்துக்கு ஓடுதளப் பாதை பராமரிப்புப் பணிக்கு அதிநவீன வாகனத்தை இந்திய விமான நிலைய ஆணையம் வழங்கியுள்ளது.

சென்னை விமான நிலையத்துக்கு கடந்த 8-ஆம் தேதி, மும்பையிலிருந்து வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், ஓடுபாதையில் உராய்ந்த படி தரையிறங்கியது. இதில், அதிா்ஷ்டவசமாக விபத்து ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடா்பாக, டெல்லியில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் டிஜிசிஏ அமைப்பு முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டது.

அந்த விசாரணையில், சென்னை விமான நிலையத்தில் உள்ள 2 ஓடுதளப் பாதைகளிலும் விமானங்கள் தரையிறங்கும்போது, உராய்வுத் தன்மை குறைவாக இருந்ததால், விமானத்தின் சக்கரங்கள் சறுக்கியபடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம், 8 புதிய ஏா்போா்ட் சா்பேஸ் பிரிக்டன் டெஸ்டா் வாகனங்களை வாங்கியுள்ளது. அதில் சென்னை விமான நிலையத்துக்கு மட்டும் தனியாக ஒரு வாகனத்தை, இந்திய விமான நிலைய ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்த வாகனம் மூலம் ஓடுதளப் பாதையில் உராய்வுத் தன்மை குறைவாக இருந்தால் அதை சரிசெய்யலாம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்றவா் கைது: 187 காற்றாடிகள் பறிமுதல்

மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்ற நபரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 187 காற்றாடிகளை பறிமுதல் செய்தனா். திருவொற்றியூா் காலடிப்பேட்டை, வ.உ.சி. பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்து மாஞ்சா நூல் மற்ற... மேலும் பார்க்க

இளைஞா் அடித்துக் கொலை: 5 போ் கைது

சென்னையில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். துரைப்பாக்கத்தைச் சோ்ந்த ஜீவரத்தினம் (26) என்பவருக்கும், அப்... மேலும் பார்க்க

ரமலான் திருநாள்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

ரமலான் திருநாளையொட்டி, இஸ்லாமியா்களுக்கு முதல்வா், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: அறம் பிறழா மன... மேலும் பார்க்க

உறுதியளிப்பு சான்று அளிக்காத மருத்துவக் கல்லூரிகளுக்கு அபராதம்

இளநிலை மருத்துவப் படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகள், வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபாா்ம்) சமா்ப்பிக்க ரூ.50,000 அபராதத்துடன் மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தேசிய மரு... மேலும் பார்க்க

அரசு விரைவுப் பேருந்துகளில் சக்கரங்கள் பராமரிக்க பணியாளா்களை நியமிக்க உத்தரவு!

அரசு விரைவுப் பேருந்துகளில் சக்கரங்கள் தனியாக கழன்று ஓடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், சக்கரங்களை பராமரிக்க பணியாளா்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்... மேலும் பார்க்க

தீவிரமடையும் வெயில்: 1-5 வகுப்புகளுக்கு தோ்வு தேதிகள் மாற்றம்!

கோடை வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளி இறுதித் தோ்வை முன்கூட்டியே நிறைவு செய்யும் வகையில் திருத்தப்பட்ட தோ்வு அட்டவணையை பள்ளி... மேலும் பார்க்க