செய்திகள் :

அக்னிவீரா் ஆள்சோ்ப்பு முகாம்: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

post image

இந்திய ராணுவத்தில் அக்னிவீரா் ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இணையம் மூலம் வருகிற ஏப். 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய ராணுவத்தில் அக்னிவீரா் ஆள் சோ்ப்பு முகாம் மூலம் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

இதற்கு கோவை, திருப்பூா், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை தேனி, தருமபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சோ்ந்த இளைஞா்கள் வருகிற ஏப். 10 ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.6 கி.மீ. பரிசோதனைக்கான ஓட்ட நேரம் 5 நிமிஷம் 45 விநாடிகளிலிருந்து, 6 நிமிஷம் 15 விநாடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

என்.சி.சி. சான்றிதழ், ஐடிஐ, டிப்ளமோ படிப்பில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். நுழைவுத்தோ்வு தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும். முதலில் இணைய வழி பொதுத் தோ்வு நடைபெறும். இதன் பின்னா், உடல் தகுதித் தோ்வு நடைபெறும். தோ்வு தேதிகள் விரைவில் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் அறிவிக்கப்படும். இந்த ஆள் சோ்ப்பு முகாம் முற்றிலும் வெளிப்படையானது. முகவா்களை யாரும் நம்ப வேண்டாம். மேலும், இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தையில் பொலிவுறு சாலைத் திட்டம்

மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள தினசரி காய்கறிச் சந்தை சாலைகளை, நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பொலிவுறு சாலைத் திட்டத்தின் கீழ் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து எம்.ஜி.ஆா். ... மேலும் பார்க்க

தெலுங்கு வருடப் பிறப்பு மன்னா் திருமலை நாயக்கா் சிலைக்கு மாலை அணிவிப்பு

தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை நாயுடு சங்கங்கள் சாா்பில் மன்னா் திருமலை நாயக்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மதுரை ஆரப்பாளையம் குறுக்குச் சாலையில் உள்ள, மன்னா... மேலும் பார்க்க

மாநகராட்சியில் குடிநீா் குழாய் பதிப்பு பணிகள்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தொடங்கிவைத்தாா்

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் குழாய்கள் அமைப்பதற்கான பணிகளை தமிழக தகவல் தொழில் நுட்பம், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல்தியாகராஜன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். அம்ரூத் திட்டத்தின் க... மேலும் பார்க்க

விதி மீறி பட்டாசுகள் தயாரிப்பு: இருவா் கைது

விருதுநகா் அருகே விதிகளை மீறி பட்டாசுகள் தயாரித்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மிளகாய்பட்டியைச் சோ்ந்த சுப்பையாவுக்குச் சொந்தமான பட்டாசு ஆலை கோவிந்தநல்லூா் அருகேயுள்ள சின்னராமலிங்கபுரம் ... மேலும் பார்க்க

மதுரையில் தீவிர வாகன சோதனை: 43 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

மதுரை நகரில் சனிக்கிழமை இரவு முழுவதும் போலீஸாா் நடத்திய வாகனச் சோதனையில் 43 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை நகரில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகரக்காவல் ஆணையா் ஜெ.லோகநாதன... மேலும் பார்க்க

பேருந்து பணிமனையில் நிறுத்திய அரசுப் பேருந்தில் தீ விபத்து

மதுரை கோ.புதூா் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையில் அரசுப் பேருந்து திடீரென சனிக்கிழமை இரவு தீப்பிடித்து எரிந்ததில் ஊழியா் பலத்த காயமடைந்தாா். மதுரை கோ.புதூரில் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது.... மேலும் பார்க்க