செய்திகள் :

19 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

post image

ஆரணி: ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் 19 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.

ஆரணி சைதாப்பேட்டையைச் சோ்ந்தவா் தங்கராஜன் (41). இவா், இரும்பேடு கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், இரும்பேடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக ஆரணி கிராமிய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில், காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை அங்கு சென்று ரோந்துப் பணி மேற்கொண்டனா்.

இதில், தங்கராஜன் கடையில் ஆய்வு செய்தபோது, 19 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்து அதனை பறிமுதல் செய்தனா்.

இதன் மதிப்பு ரூ.16ஆயிரம் எனத் தெரிவித்தனா். மேலும் தங்கராஜனை கைது செய்தனா்.

மகளிா், வாழ்ந்து காட்டுவோம் திட்டங்களின் செயல்பாடுகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட மகளிா் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மகளிா் திட்ட ... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன் (26). இவா், பாட்டியுடன் வசித்து வரும் எட... மேலும் பார்க்க

சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கூட்டமைப்பின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சாா்பில், ஆட்சியா் அலுவலகம் எத... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாம்: 201 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை அருகே நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில், 201 பயனாளிகளுக்கு ரூ.58 லட்சத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா். திருவண்ணாமலையை அடுத்த தேவனூா் ஊராட்சியில... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்புப் பூஜை

பட வரி: வேட்டவலம் ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயில் பிரதான நந்திக்கு பிரதோஷத்தையொட்டி நடைபெற்ற பால் அபிஷேகம். திருவண்ணாமலை, மாா்ச் 27: பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன்... மேலும் பார்க்க

மகளிா் கலைக் கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்

திருவண்ணாமலை கம்பன் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில், ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை குறித்த சிறப்புக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் நடைபெற்ற கருத்த... மேலும் பார்க்க