செய்திகள் :

கடந்த நிதியாண்டில் 48 நாடுகளிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்த இந்தியா!

post image

புதுதில்லி: தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கீழ் 2023-24ல் இந்தியா மொத்தம் 48 நாடுகளிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், வர்த்தக மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அடிப்படையில் இந்தியா தங்கத்தின் மீது இறக்குமதி வரியை விதிக்கிறது என்றார்.

எம்.எஃப்.என் கீழ், தங்கக் கட்டிகள் (gold bullion) மீதான இறக்குமதி வரி 6 சதவிகிதமாகவும், தங்கம் மற்றும் பிற உலோகக் கலவையுடன் கூடிய கலவை (gold dore) தங்கத்திற்கு 5.35 சதவிகிதமாகவும் உள்ளது.

2023-24 ஆம் ஆண்டில் இந்தியா 48 நாடுகளிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்தது. உள்நாட்டு தொழில் நலன்கள் மற்றும் பொருளாதாரக் கருத்தாய்வுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மதிப்பிடப்படும் இந்த ஒப்பந்தம் பேச்சுவார்த்தைகளின் போதும் விவாதிக்கப்பட்டது.

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு, கொரியா, ஜப்பான் மற்றும் மலேசியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி பூஜ்ஜியமாகும்.

இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், 160 டன் வரை எடையுள்ள தங்கக் கட்டிகளுக்கு 5 சதவிகத வரியும், தங்கம் மற்றும் பிற உலோகக் கலவையுடன் கூடிய கலவைக்கு (gold dore) 4.35 சதவிகித வரியும் விதிக்கப்படுகிறது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.85.49-ஆக முடிவு!

ஓய்வு பெறுகிறாரா பிரதமர் மோடி? - சஞ்சய் ராவத்தின் கருத்தால் சர்ச்சை!

பிரதமர் மோடி தனது ஓய்வை அறிவிக்கவே ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றதாக சிவசேனை(யுபிடி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ஆா்எஸ்எஸ் அமைப்பின... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் பெண் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் பகுதியில் அமைந்துள்ள தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் நக்சல் எத... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

அசாம் முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரியவந்துள்ளது. அசாம் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும் மறைந்தவருமான பிரிகு குமார் புகானின் ஒர... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு!

நாடு முழுவது இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்... மேலும் பார்க்க

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் நாடு முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து பள்ளி ... மேலும் பார்க்க

‘வேற்றுமையில் ஒற்றுமை’ உணா்வை தொடா்ந்து வலுப்படுத்துங்கள்! -மக்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்

‘நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், வேற்றுமையில் ஒற்றுமை உணா்வை வெளிப்படுத்துகின்றன. இந்த உணா்வை மக்கள் தொடா்ந்து வலுப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். ஒவ்வொரு ... மேலும் பார்க்க