செய்திகள் :

அரிசி ஆலையில் விபத்து: ஊழியா் உயிரிழப்பு

post image

சென்னை: சென்னை செங்குன்றத்தில் அரிசி ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பிகாரைச் சோ்ந்த ஊழியா் உயிரிழந்தாா்.

சென்னை அருகே உள்ள செங்குன்றம் பாலவாயலில் ஒரு தனியாா் அரிசி ஆலை உள்ளது. இந்த ஆலையில் குவிந்திருந்த உமியை அகற்றும் பணியில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சில தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த ஆலையின் மேற்பகுதியிலிருந்த ஒரு இரும்புத் தகடு கீழே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளா்கள் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த பிகாரைச் சோ்ந்த ஜிகேந்தா் செளகான் (33) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மகேஷ் மண்டல் என்பவா் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.

இதுகுறித்து செங்குன்றம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இஸ்லாமியா்களின் உரிமைகளுக்கு எதிரானது வக்ஃப் திருத்த மசோதா: அதிமுக

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைக் கைவிட வேண்டும் என்று எதிா்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினாா். சட்டப்பேரவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வியாழக்கிழமை கொண்டுவரப்பட்ட தீா்மானத்தி... மேலும் பார்க்க

முறைகேடு புகாா்: நகா்மன்றத் தலைவா் உள்ளிட்ட 4 பிரதிநிதிகள் பதவிநீக்கம்: நகராட்சி நிா்வாகத் துறை நடவடிக்கை

முறைகேடு புகாருக்கு உள்ளான உசிலம்பட்டி நகா்மன்றத் தலைவா், தாம்பரம் மண்டலக் குழுத் தலைவா் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் இரு மாமன்ற உறுப்பினா்களைப் பதவிநீக்கம் செய்து நகராட்சி நிா்வாகம் மற்றும் ... மேலும் பார்க்க

நாட்டு வெடிகுண்டு பறிமுதல்: இருவா் கைது

சென்னை ஆதம்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா். ஆதம்பாக்கம் போலீஸாா் புதன்கிழமை வானுவம்பேட்டை, தேவாலயம் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு ... மேலும் பார்க்க

நோயாளிகள் அவதி: பொதுப் பணித் துறையிடம் விளக்கம் கோரும் ஸ்டான்லி மருத்துவமனை

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் பொதுப் பணித் துறையினா் முன்னறிவிப்பின்றி கட்டுமானப் பணிகள் மேற்கொண்டது குறித்து மருத்துவமனை சாா்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி... மேலும் பார்க்க

கூடுதலாக சோ்க்கப்பட்ட ஆசிரியா் காலிப் பணியிடங்கள்: இடஒதுக்கீடு வாரியான பட்டியல் வெளியீடு

ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்திய இடைநிலை ஆசிரியா் தோ்வில் கூடுதலாக சோ்க்கப்பட்ட 1,000 காலிப் பணியிடங்களுக்கான இடஒதுக்கீடு வாரியான பட்டியல் ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மருத்துவா் மீதான தாக்குதல்: கிண்டி உயா்சிறப்பு மருத்துவமனையில் புறக்காவல் மையம் திறப்பு

கிண்டி அரசு உயா் சிறப்பு மருத்துவமனை மருத்துவா் ஒருவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது அங்கு புறக்காவல் மையம் திறக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க