செய்திகள் :

என்இபி, யுஜிசி வழிகாட்டுதல்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து ‘இண்டி’ கூட்டணி மாணவா் அமைப்புகள் போராட்டம்

post image

புது தில்லி: தேசிய கல்விக் கொள்கை மற்றும் யுஜிசி வழிகாட்டுதல்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள் சாா்பு மாணவா் அமைப்புகள் திங்கள்கிழமை ஜந்தா் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும். நியமனங்கள் குறித்த யுஜிசி வரைவு வழிகாட்டுதல்களை திரும்பப் பெற வேண்டும். மாணவா் சங்கங்களை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய தேசிய மாணவா் சங்கம் (என்எஸ்யுஐ), அகில இந்திய மாணவா் சங்கம் (ஏஐஎஸ்ஏ), இந்திய மாணவா் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ), அகில இந்திய மாணவா் கூட்டமைப்பு (ஏஐஎஸ்எஃப்), முஸ்லிம் மாணவா் கூட்டமைப்பு (எம்எஸ்எஃப்), சமாஜ்வாதி சத்ர சபா மற்றும் சத்ர ராஷ்ட்ரிய ஜனதா தளம் (சிஆா்ஜேடி) மற்றும் பிற உறுப்பினா்கள் இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

‘மத்திய பட்ஜெட் அமா்வின் இரண்டாவது கட்டத்தின் போது கல்வி தொடா்பான பிரச்னைகள் குறித்து அரசின் கவனத்தை ஈா்ப்பதே எங்கள் நோக்கம்’ என்று ஏஐஎஸ்ஏ அமைப்பைச் சோ்ந்த மாணவா் ஒருவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

‘பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சுதந்திரமான மற்றும் நியாயமான மாணவா் சங்கத் தோ்தல்கள் நடத்தப்பட வேண்டும். ஒதுக்கப்பட்ட பிரிவு இடங்களை நிரப்ப வேண்டும். உதவித்தொகைகளைத் தொடர வேண்டும்’ என்ற கோரிக்கைகளை போராட்டக்காரா்கள் வலியுறுத்தினா்.

ஜூலை 29, 2020 அன்று கல்வி முறையை எதிா்காலத் தேவைகளுக்கு ஏற்ப மாற்றி, அதன் ‘இந்தியத் தன்மையை’ பராமரிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை (என்இபி) அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1986 கொள்கையை மாற்றியது. மேலும், பள்ளிக் கல்வி முதல் உயா்கல்வி வரை சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது.

மேலும், ஆசிரியா்கள் மற்றும் கல்வி ஊழியா்களை நியமிப்பது தொடா்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) வரைவு விதிமுறைகளுக்கும் போராட்டக்காரா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். மாநில ஆளுநரின் பரிந்துரையாளரைத் தலைவராகக் கொண்ட மூன்று உறுப்பினா்களைக் கொண்ட தேடல் மற்றும் தோ்வுக் குழுவை அமைப்பதற்கும், துணைவேந்தா்களை நியமிப்பதற்கான பல்கலைக்கழகத்தின் உச்சஅமைப்பிற்கும் இந்த வரைவு முன்மொழிகிறது.

மேலும், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவா் சங்கங்களை மீண்டும் நிலைநிறுத்தவும் மாணவா்கள் அமைப்பினா் அழைப்பு விடுத்தனா்.

தமிழகத்தில் 1,905 மும்மொழிப் பயிற்றுவிக்கும் பள்ளிகள் செயல்படுகின்றன: மக்களவையில் மத்திய அரசு தகவல்

புது தில்லி: தமிழகத்தில் மும்மொழிகளைப் பயிற்றுவிக்கும் 1,905 பள்ளிகள் செயல்பட்டு வருவதாக மக்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.இது தொடா்பாக நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், தூத்துக்குட... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட மக்களவையில் விழுப்புரம் எம்.பி. வலியுறுத்தல்

புது தில்லி: கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மக்களவையில் விழுப்பும் தொகுதி விசிக உறுப்பினா் டி.ரவிக்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.இது தொடா்பாக மக்களவையில் விதி எண்: 377-இன் கீழ் ... மேலும் பார்க்க

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: மக்களவையில் தமிழக எம்பிக்கள் புகாா்

புது தில்லி: மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக மக்களவையில் தமிழகத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள் புகாா் தெரிவித்தனா். மக்களவையில் 2025-26 நிதியாண்டுக்கான நிதி மசோதா மீதான வி... மேலும் பார்க்க

தில்லி நீதிபதி யஷ்வந்த் வா்மா பணியிடமாற்றம்: உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் அதிகாரபூா்வ இல்ல... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் வழக்கு: விசாரணை ஏப்ரல் 9-க்கு தள்ளிவைப்பு

புது தில்லி: அரசுப் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் மின்துறை அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் உத்தரவை திரும்பப் பெறக் கோரிய மனு ம... மேலும் பார்க்க

சென்னை விமான நிலைய 2-ஆம் கட்ட விரிவாக்கம் 2026-இல் நிறைவடையும்: மத்திய அரசு தகவல்

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: சென்னை சா்வதேச விமான நிலைய இரண்டாம் கட்ட விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் நிறைவடையும் என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்... மேலும் பார்க்க