செய்திகள் :

டி-மார்ட் போன்ற நிறுவனங்களை தடை செய்யாவிட்டால் விரைவில் போராட்டம்: விக்ரமராஜா

post image

சேலம் : டி-மார்ட் போன்ற நிறுவனங்களை தடை செய்யாவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்ரமராஜா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா சிறப்புரை ஆற்றினாா்.

பின்னர்,விக்கிரமராஜா செய்தியாளா்களிடம் கூறுகையில்,

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் மே 5 ஆம் தேதி வணிகர் சங்க பேரமைப்பின் 42 ஆவது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு வணிகா் அதிகார பிரகடன மாநாடாக நடைபெறும்.

இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்: விஜய்

இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. குறிப்பாக சிறு வணிக விபாரிகளையும், மளிகை கடை உரிமையாளர்களையும் பாதிக்கும் டி-மார்ட் போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அனுமதி இல்லாமல் அத்துமீறி தங்களது நிறுவனங்களை நிறுவி வருகிறது. இதனால் 20 சதவிகித வியாபாரிகள் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இதனை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை எனில் வணிகர் சங்கங்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த போராட்டம் அகில இந்திய அளவில் நடத்தப்படும். வணிகா்கள் நலனை காக்க சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும். ஜிஎஸ்டி உள்பட வணிகா்களின் பிரச்னைகளின் உரிய தீா்வு காணப்படாவிட்டால், போரட்டத்தை முன்னெடுக்க வணிகா் சங்க பேரமைப்பு தயங்காது என்று விக்ரமராஜா கூறினார்.

உலகின் மொத்த பணமும் இருந்திருந்தால் விமானியாக மாறியிருப்பேன்: கிளன் பிலிப்ஸ்

உலகின் மொத்த பணமும் இருந்திருந்தால் விமானியாக மாறியிருப்பேன் என நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கிளன் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான கிளன் பிலிப்ஸ் அவரது பிரம்மிக்க வைக்கும்... மேலும் பார்க்க

யேமன்: ஹவுதி படைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதலில் 2 பேர் பலி!

யேமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சிப்படையின் மீதான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் 2 பேர் பலியாகினர்.யேமன் நாட்டில் ஹவுதி படையினரின் தளங்களைக் குறிவைத்து அமெரிக்க ராணுவத்தினர் இன்று (மார்ச் 25) அதிகாலை... மேலும் பார்க்க

ஐபிஎல்: கடைசி ஓவரில் தில்லி கேபிடல்ஸ் த்ரில் வெற்றி!

விசாகப்பட்டினம்: நடப்பு ஐபிஎல் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயித்த 210 ரன்கள் இலக்கைதில்லி கேபிடல்ஸ் 19.3 ஓவர்களில் எட்டி முதல் வெற்றி... மேலும் பார்க்க

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வா? - அன்புமணி கேள்வி

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி நாளை ஆலோசனை

சென்னை: தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை (மாா்ச் 24) ஆலோசனை நடத்தவுள்ளாா்.த... மேலும் பார்க்க

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்: விஜய்

சென்னை: பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம... மேலும் பார்க்க