செய்திகள் :

உக்ரைன்: ரஷிய டிரோன்களின் தாக்குதலில் குழந்தை உள்பட 3 பேர் பலி!

post image

உக்ரைன் மீது ரஷிய டிரோன்கள் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் மீது இன்று (மார்ச் 23) அதிகாலை ரஷியா டிரோன்கள் மூலம் நடத்திய தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள். அதிகாலையில் சுமார் 5 மணி நேரமாக நீடித்த இந்த தாக்குதலில் அங்குள்ள குடியிருப்புப் பகுதிகள் சேதாரமானதுடன் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக கீவ் நகர ராணுவம் அறிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் டினிப்ரோ மாவட்டத்திலுள்ள 2 குடியிருப்பு கட்டடங்களில் பற்றிய தீயினால் பெண் ஒருவரும், போடில் மாவட்டத்திலுள்ள 25 அடுக்கு மாடி கட்டடத்தின் 20 வது தளத்தில் ஏற்பட்ட தீயினால் மற்றொரு நபரும் பலியானதாக் கூறப்படுகின்றது.

இதையும் படிக்க: பாகிஸ்தானில் 2வது குரங்கு அம்மை பாதிப்பு உறுதி!

முன்னதாக, ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் இந்த தாக்குதலானது தற்போது நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்ததிற்காக உக்ரைன் பிரதிநிதிகள் சவுதி அரேபியாவில் அமெரிக்க பிரதிநிதிகளை சந்திப்பார்கள் என உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார். மேலும், இந்த பேச்சு வார்த்தையில் உக்ரைனின் எரிசக்தி வசதிகள் மற்றும் பொதுமக்களின் உள்கட்டமைப்பை குறிவைத்து நடத்தப்படும் நீண்ட தூர தாக்குதல்களை நிறுத்துவது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐபிஎல்: கடைசி ஓவரில் தில்லி கேபிடல்ஸ் த்ரில் வெற்றி!

விசாகப்பட்டினம்: நடப்பு ஐபிஎல் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயித்த 210 ரன்கள் இலக்கைதில்லி கேபிடல்ஸ் 19.3 ஓவர்களில் எட்டி முதல் வெற்றி... மேலும் பார்க்க

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வா? - அன்புமணி கேள்வி

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச... மேலும் பார்க்க

டி-மார்ட் போன்ற நிறுவனங்களை தடை செய்யாவிட்டால் விரைவில் போராட்டம்: விக்ரமராஜா

சேலம் : டி-மார்ட் போன்ற நிறுவனங்களை தடை செய்யாவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்ரமராஜா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். சேலம் ... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி நாளை ஆலோசனை

சென்னை: தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை (மாா்ச் 24) ஆலோசனை நடத்தவுள்ளாா்.த... மேலும் பார்க்க

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்: விஜய்

சென்னை: பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம... மேலும் பார்க்க

ஏப். 6-ல் உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை முதல்வா் திறந்து வைக்கிறாா்!

நீலகிரி: நாட்டிலேயே முதன் முறையாக பழங்குடியினா்களுக்கு என 50 படுக்கை வசதிகளுடன், மலை பிரதேசத்தில் அதிநவீன 700 படுக்கைகள் கொண்ட உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை ஏப்ரல் 6 ஆம் தேதி முதல்வர் மு.க.... மேலும் பார்க்க