செய்திகள் :

திருப்பரங்குன்றம் கோயிலில் ரோப்காா் வசதி: அமைச்சா் பி.கே.சேகா்பாபு உறுதி

post image

சென்னை: திருப்பரங்குன்றம் கோயிலில் ரோப்காா் வசதி ஏற்படுத்துவதற்கான பணிகள் நிகழாண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என்று இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு உறுதியளித்தாா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த துணை வினாவை வி.வி.ராஜன் செல்லப்பா எழுப்பினாா். அப்போது பேசுகையில், அறுபடை வீடுகளில் முதல் படைவீடாம் திருப்பரங்குன்றத்துக்கு ரோப்காா் வசதி அமைக்க உரிய நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே, அதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றாா்.

இதற்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்: திருப்பரங்குன்றத்துக்கும் திருநீா்மலைக்கும் ரோப்காா் அமைக்க கடந்த ஆண்டு ரூ.26 கோடி அறிவிக்கப்பட்டது. இப்போது, மூன்று வகையான அளவைப் பணிகள் முடிவுற்று ரோப்காா் அமைக்க ரூ.32 கோடி செலவாகும் என தனியாா் நிறுவனம் சாா்பில் மதிப்பிடப்பட்டுள்ளது. போதுமான நிதிஒதுக்கப்பட்டு நிகழாண்டு இறுதிக்குள்ளாக பணிகள் தொடங்கப்படும்.

திருப்பரங்குன்றம் கோயிலில் குடமுழுக்கு செய்வதற்கான பணிகள் ரூ.2.5 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜூலை 14-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது என்றாா் அமைச்சா்.

தமிழகம் முழுவதும் மார்ச் 29-ல் திமுக ஆர்ப்பாட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ - MGNREGA) மூலம் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ. 4,034 கோடி நிதியை வழங்காமல் இருக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ... மேலும் பார்க்க

72 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கம்: முதல்வர் ஸ்டாலின்

புதியதாக 72 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 26) சட்டப் பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்... மேலும் பார்க்க

மார்ச் மாதச் சம்பளம்: தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு மார்ச் மாதச் சம்பளம் வரும் ஏப். 2 ஆம் தேதி வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக அரசின... மேலும் பார்க்க

சென்னையில் 2 புதிய வழித்தடம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர்!

சென்னை மெட்ரோ ரயிலின் 2 புதிய வழித்தடத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் ... மேலும் பார்க்க

ஆன்லைனில் திருமணச் சான்று பெற நடவடிக்கை எடுக்கப்படுமா? - அமைச்சர் பதில்!

இணைய வழியில் திருமணச் சான்று பெற வழிவகை செய்யப்படுமா? என்ற திமுக எம்எல்ஏ எழிலன் கேள்விக்கு பேரவையில் அமைச்சர் மூர்த்தி பதிலளித்தார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெ... மேலும் பார்க்க

டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டி கேட்டவர் அடித்துக் கொலை!

கோவையில் டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டி கேட்டவரை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு - ஈச்சனாரி சாலை சந்திப்பில் சிமெண்ட் மற்றும் கட்... மேலும் பார்க்க