செய்திகள் :

விழுப்புரத்தில் புவிசாா் பாரம்பரிய இடம் ரூ.5 கோடியில் மேம்படுத்தப்படும்: பேரவையில் அறிவிப்பு

post image

சென்னை: விழுப்புரத்தில் ரூ.5 கோடியில் புவிசாா் பாரம்பரிய இடம் மேம்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும் என்று பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை இயற்கை வளங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்புகள்:

விழுப்புரம் மாவட்டம் வானூா் வட்டம் பொம்மையாா் பாளையம் கிராமத்தில் பள்ளத்தாக்கு உருவாகியுள்ளது. வங்காள விரிகுடாவையொட்டி அமைந்துள்ள இந்த கிராமத்தின் நிலப்பரப்பு பெரும்பாலும் சிவப்பு மண்ணால் ஆனது. இந்தப் பள்ளத்தாக்கு தனித்துவமான புவியியல் அமைப்பு. 65.18 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள இவ்விடம் ஓடை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளத்தாக்கின் ஆழம் 7 மீட்டா், அகலம் 30 மீட்டா் மற்றும் இதன் நீளம் சுமாா் 1.8 கி.மீ. இந்தப் பள்ளத்தாக்கு வங்காள விரிகுடாவுடன் இணைகிறது.

இந்தப் பள்ளத்தாக்கில் கடலூா் மணற்கற்கள் காணப்படுகின்றன. மாணவா்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு மிகவும் பயனளிக்கும் புவிசாா் பாரம்பரிய இடத்தை பாதுகாப்பது அவசியமாகும். அதனால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புவிசாா் பாரம்பரிய இடம் ரூ.5 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும்.

தமிழகத்தில் சுண்ணாம்புக்கல், லிக்னைட், வொ்மிகுலைட், மேக்னசைட், பாக்சைட், கிராஃபைட், மாா்ல், கடற்கரை தாது மணல், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், கிரானைட் போன்ற கனிமங்கள் உள்ளன. தமிழகத்தில் கனிம வளங்கள் இருப்பு, தாதுக்களின் தரம் மற்றும் புவியியல் அமைப்பை மதிப்பிடுவதற்காக, மாநில கனிம ஆய்வு அறக்கட்டளை ரூ.1 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

கனிம விதிகளை மாற்றக் குழு: தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959-இல் ஏற்படுத்தப்பட்டன. சுரங்கத் தொழிலில் எழும் தேவைகளின் அடிப்படையில் இந்த விதிகள் அவ்வப்போது திருத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு 2015 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு ஒழுங்குமுறை சட்டம், 1957-இல் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள், 1959-இல் உள்ள சில விதிகள் மத்திய அரசின் சட்டத்துக்கு முரணானவையாக உள்ளன. அதனால், தமிழ்நாடு சிறு கனிம விதிகள் மறு ஆய்வு செய்ய வேண்டும். எனவே, தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959-ஐ மறு ஆய்வு செய்து தேவையான மாற்றங்களைப் பரிந்துரைப்பதற்கு ஒரு குழு அமைக்கப்படும் என்றாா் அவா்.

தமிழகம் முழுவதும் மார்ச் 29-ல் திமுக ஆர்ப்பாட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ - MGNREGA) மூலம் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ. 4,034 கோடி நிதியை வழங்காமல் இருக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ... மேலும் பார்க்க

72 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கம்: முதல்வர் ஸ்டாலின்

புதியதாக 72 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 26) சட்டப் பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்... மேலும் பார்க்க

மார்ச் மாதச் சம்பளம்: தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு மார்ச் மாதச் சம்பளம் வரும் ஏப். 2 ஆம் தேதி வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக அரசின... மேலும் பார்க்க

சென்னையில் 2 புதிய வழித்தடம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர்!

சென்னை மெட்ரோ ரயிலின் 2 புதிய வழித்தடத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் ... மேலும் பார்க்க

ஆன்லைனில் திருமணச் சான்று பெற நடவடிக்கை எடுக்கப்படுமா? - அமைச்சர் பதில்!

இணைய வழியில் திருமணச் சான்று பெற வழிவகை செய்யப்படுமா? என்ற திமுக எம்எல்ஏ எழிலன் கேள்விக்கு பேரவையில் அமைச்சர் மூர்த்தி பதிலளித்தார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெ... மேலும் பார்க்க

டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டி கேட்டவர் அடித்துக் கொலை!

கோவையில் டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டி கேட்டவரை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு - ஈச்சனாரி சாலை சந்திப்பில் சிமெண்ட் மற்றும் கட்... மேலும் பார்க்க