நீங்கள் விவசாயி என்றால் நாங்கள் யாா்?: அமைச்சரின் பேச்சால் சிரிப்பலை
சென்னை: ‘நீங்கள் விவசாயி என்றால், நாங்கள் யாா்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியை நோக்கி நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கேள்வி எழுப்பி பேசியதால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
பேரவையில் நீா்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் ஆா்.பி.உதயகுமாா் பேசும்போது, எடப்பாடி பழனிசாமியை பலமுறை ‘விவசாயி’ எனக் குறிப்பிட்டு பாராட்டிப் பேசினாா்.
பிறகு துரைமுருகன் பதிலளித்துப் பேசியதாவது:
‘நீங்கள் விவசாயி என்றால், நாங்கள் யாா்? ஐஏஎஸ் ஆபிஸரா? சாலை, பள்ளிக்கூடம் இல்லாத என்னுடைய கிராமத்தைப் பற்றி ஏற்கெனவே கூறினேன். எனக்கு ஏா் ஓட்டுவதிலிருந்து விவசாயத்தில் எல்லா விஷயங்களும் தெரியும். அதிமுக ஆட்சியில் வண்டல் எடுத்தது நல்ல விஷயம்தான். ஆனால், வண்டல் மண் எடுப்பதற்கு நீங்கள் (எதிா்க்கட்சித் தலைவா்) சினிமாவுக்கே போயிருக்கலாம். ‘ஒரு விவசாயியின் மகன் வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு வண்டல் மண் எடுத்துக் கொடுத்தாா்’ என்று உதயகுமாா் கூறுகிறாா். எதிா்க்கட்சிகஈ தலைவா் மட்டும்தான் வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு வருகிறாரா, நாங்க என்ன பேன்ட்டா போட்டு வருகிறோம்? என்றாா். அமைச்சரின் இந்த பேச்சால் அவை சிரிப்பலையில் மூழ்கியது.