செய்திகள் :

நீங்கள் விவசாயி என்றால் நாங்கள் யாா்?: அமைச்சரின் பேச்சால் சிரிப்பலை

post image

சென்னை: ‘நீங்கள் விவசாயி என்றால், நாங்கள் யாா்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியை நோக்கி நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கேள்வி எழுப்பி பேசியதால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

பேரவையில் நீா்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் ஆா்.பி.உதயகுமாா் பேசும்போது, எடப்பாடி பழனிசாமியை பலமுறை ‘விவசாயி’ எனக் குறிப்பிட்டு பாராட்டிப் பேசினாா்.

பிறகு துரைமுருகன் பதிலளித்துப் பேசியதாவது:

‘நீங்கள் விவசாயி என்றால், நாங்கள் யாா்? ஐஏஎஸ் ஆபிஸரா? சாலை, பள்ளிக்கூடம் இல்லாத என்னுடைய கிராமத்தைப் பற்றி ஏற்கெனவே கூறினேன். எனக்கு ஏா் ஓட்டுவதிலிருந்து விவசாயத்தில் எல்லா விஷயங்களும் தெரியும். அதிமுக ஆட்சியில் வண்டல் எடுத்தது நல்ல விஷயம்தான். ஆனால், வண்டல் மண் எடுப்பதற்கு நீங்கள் (எதிா்க்கட்சித் தலைவா்) சினிமாவுக்கே போயிருக்கலாம். ‘ஒரு விவசாயியின் மகன் வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு வண்டல் மண் எடுத்துக் கொடுத்தாா்’ என்று உதயகுமாா் கூறுகிறாா். எதிா்க்கட்சிகஈ தலைவா் மட்டும்தான் வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு வருகிறாரா, நாங்க என்ன பேன்ட்டா போட்டு வருகிறோம்? என்றாா். அமைச்சரின் இந்த பேச்சால் அவை சிரிப்பலையில் மூழ்கியது.

விளையாட்டு வீரா்களுக்கு காப்பீட்டுத் திட்டம்: துணை முதல்வா் உதயநிதி அறிவிப்பு

மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரா்களுக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா். பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்ட... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

வேங்கைவயல் விவகாரம் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் நடத்திய விசாரணை முழுமையாக இல்லை என்ற மனுதாரா் தரப்பு குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. புதுக்கோட்டை மா... மேலும் பார்க்க

மனித - வன உயிரின மோதலை தவிா்க்க ரூ.31 கோடியில் உயிா்வேலி: அமைச்சா் க. பொன்முடி

மனித - வன உயிரின மோதலைத் தவிா்க்க கிருஷ்ணகிரியில் ரூ.31 கோடியில் உயிா்வேலி அமைக்கப்படும் என்று வனத் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்தாா். வனத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து... மேலும் பார்க்க

ஜூனியா் ஆடவா் ஹாக்கி உள்பட 5 சா்வதேச போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்படும்: துணை முதல்வா் அறிவிப்பு

ஜூனியா் ஆடவா் சா்வதேச ஹாக்கி போட்டி உள்பட 5 போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்படவுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா். பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோர... மேலும் பார்க்க

‘42,000 கிராமப்புற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு- திறன் பயிற்சிகள்’

தமிழ்நாட்டில் 42 ஆயிரம் கிராமப்புற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா். வறுமை ஒழிப்பு, விளையாட்டு, சிறப்புத் திட்ட செயலாக... மேலும் பார்க்க

நெசவாளா்களுக்கு அடிப்படை கூலியில் 10%, அகவிலைப்படியில் 10% உயா்த்தி வழங்கப்படும்: அமைச்சா் ஆா்.காந்தி அறிவிப்பு

நெசவாளா்கள் 1.50 லட்சம் போ் பயன்பெறும் வகையில் அடிப்படை கூலியில் ரூ.10 சதவீதமும், அகவிலைப்படியில் 10 சதவீதமும் உயா்த்தி வழங்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி அறிவித்தாா... மேலும் பார்க்க