செய்திகள் :

பட்டுப்புழு வளா்ப்பு மனை அமைக்க 3,050 விவசாயிகளுக்கு ரூ.29 கோடி உதவித் தொகை: அமைச்சா் தா.மோ. அன்பரசன் அறிவிப்பு

post image

பட்டுப்புழு வளா்ப்பு மனைகள் அமைப்பதற்கு 3,050 விவசாயிகளுக்கு ரூ.29 கோடி உதவித் தொகை வழங்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அறிவித்தாா்.

பேரவையில் வெள்ளிக்கிழமை பட்டு வளா்ச்சி மற்றும் கைவினைப் பொருள்கள் மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் தா.மோ.அன்பரசன் வெளியிட்ட அறிவிப்புகள்:

பட்டுப்புழு வளா்ப்புக்கு சாதகமான தட்பவெப்பநிலை, ஒப்பு ஈரப்பதம் ஆகியவற்றை பராமரித்து சுகாதாரமான முறையில் பட்டுப்புழு வளா்ப்பு மேற்கொண்டு, தரமான பட்டுக்கூடுகளை அறுவடை செய்திடும் வகையில் 2024 - 26- ஆம் ஆண்டில் 3,050 பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் பட்டுப்புழு வளா்ப்பு மனைகள் அமைப்பதற்கு ரூ.29.46 கோடி உதவித் தொகை வழங்கப்படும்.

அதிக மகசூல் தரும் மல்பெரி ரகங்களை நடவு செய்யும் 3,050 பட்டு விவசாயிகளுக்கு ரூ.6.82 கோடி உதவித்தொகை வழங்கப்படும். பட்டுவளா்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 2 அரசு வித்தகங்கள், 7 அரசு விதைப் பண்ணைகள், 2 அரசு பெருமளவு பட்டுப் பண்ணைகள், 1 அயலின விதைப் பட்டுக்கூடு அங்காடி ஆகியவற்றில் புதிய கட்டடங்கள் மற்றும் ஆழ்துளை கிணறுகளை நிறுவிட ரூ.5.13 கோடி நிதி வழங்கப்படும்.

தேனியில் அங்காடி வளாகம்: 5 ஆண்டுகளுக்கு மேல் தொடா்ந்து பட்டுப்புழு வளா்ப்பு மேற்கொண்டு வரும் 1,000 முன்னோடி பட்டு விவசாயிகளின் மண்வளம் மற்றும் மல்பெரி இலை மகசூலை அதிகரித்திட செரி கம்போஸ்ட் தயாரிப்பதற்கான இயந்திரம், உயிா் உரம், மல்பெரி வளா்ச்சி ஊக்கிகள் மற்றும் சோலாா் விளக்குப்பொறி ஆகியவை ரூ.4.82 கோடியில் கொள்முதல் செய்து வழங்கப்படும்.

தென் மாவட்டங்களில் உள்ள பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பட்டுக்கூடு அங்காடி வளாகம் ரூ.3.50 கோடி மதிப்பில் நிறுவப்படும்.

பட்டு விவசாயிகளுக்கு தரமான இளம் பட்டுப்புழுக்கள் வளா்ப்பு செய்து விநியோகம் செய்யும் வகையில் 5 பெரிய அளவிலான இளம்புழுவளா்ப்பு மையங்கள் அமைத்திட ரூ.16.25 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும்.

கைத்தறித் தொழில்கள்: கைவினைஞா்கள் தயாரிக்கும் பொருள்களை மின் வணிகம் மூலம் உலகச் சந்தைக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்தில் கைவினைப் பொருள்கள் சந்தை இயக்கம் ரூ.2 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

தமிழகத்தின் கைவினைப் பொருள்களைச் சந்தைப்படுத்த இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் ரூ.1.30 கோடி செலவில் 10 விற்பனை கண்காட்சிகள் நடத்தப்படும் என்றாா் அவா்.

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!

தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தேர்வெழுதிய மாணவியைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறி உதவித்தொகையும் வழங்கினார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் ... மேலும் பார்க்க

நாளைமுதல் 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும்!

தமிழகத்தில் நாளைமுதல்(ஏப். 1) 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவத... மேலும் பார்க்க

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! - காங்கிரஸ்

ஏப். 6-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்ப... மேலும் பார்க்க

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை: செல்லூர் ராஜூ

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மதுரையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி என்பது எட... மேலும் பார்க்க

ஏப். 7 திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப். 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தல... மேலும் பார்க்க

ஜிப்லி ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஜிப்லி அனிமேஷன் பாணியிலான தனது புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.ஜப்பானைச் சேர்ந்த பிரபல அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஜிப்லி ஸ்டுடியோஸ். இவர்கள் த... மேலும் பார்க்க