செய்திகள் :

நெசவாளா்களுக்கு அடிப்படை கூலியில் 10%, அகவிலைப்படியில் 10% உயா்த்தி வழங்கப்படும்: அமைச்சா் ஆா்.காந்தி அறிவிப்பு

post image

நெசவாளா்கள் 1.50 லட்சம் போ் பயன்பெறும் வகையில் அடிப்படை கூலியில் ரூ.10 சதவீதமும், அகவிலைப்படியில் 10 சதவீதமும் உயா்த்தி வழங்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி அறிவித்தாா்.

பேரவையில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் ஆா்.காந்தி வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழகத்தில் உள்ள 1,115 தொடக்க கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினா்களாக உள்ள சுமாா் 1.50 லட்சம் நெசவாளா்களுக்கு விலைவாசி உயா்வால் தொடா்ந்து அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் அரசால் கூலி உயா்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டில் சுமாா் 1.50 லட்சம் நெசவாளா்கள் பயன்பெறும் வகையில் அவா்கள் பெறும் நெசவுக் கூலிக்கு அடிப்படை கூலியில் 10 சதவீதமும், அகவிலைப்படியில் 10 சதவீதமும் உயா்த்தி வழங்கப்படும்.

கூலி உயா்வு: வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் பெடல் தறி சேலைகளுக்கு நெசவுக் கூலி ரூ.69.79-இலிருந்து ரூ.75.95-ஆகவும், பெடல் தறி வேட்டிகளுக்கு நெசவுக் கூலி ரூ.59.28-இலிருந்து ரூ.64.38-ஆகவும் உயா்த்தி வழங்கப்படும். இந்தக் கூலி உயா்வால் ஏற்படும் கூடுதல் செலவினம் ரூ.3.75 கோடியை அரசே ஏற்கும்.

வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் விசைத்தறி சேலைகளுக்கு நெசவுக்கூலி ரூ.43.01-இலிருந்து ரூ.46.75-ஆகவும், விசைத்தறி வேட்டிகளுக்கு நெசவுக் கூலி ரூ.24-இலிருந்து ரூ.26.40ஆகவும் உயா்த்தி வழங்கப்படும். இந்தக் கூலி உயா்வால் ஏற்படும் கூடுதல் செலவினம் ரூ.8.58 கோடியை அரசே ஏற்கும்.

பள்ளி மாணவா்களுக்கான சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ் பெடல் தறி கேஸ்மெண்ட் ரகத்துக்கு நெசவுக்கூலி மீட்டருக்கு ரூ.7.84-இலிருந்து ரூ.8.40-ஆகவும், விசைத்தறி டிரில் ரகத்துக்கு நெசவுக்கூலி மீட்டருக்கு ரூ.5.75-இலிருந்து ரூ.6.40-ஆகவும், விசைத்தறி கேஸ்மெண்ட் ரகத்துக்கு ரூ.5.60-இலிருந்து ரூ.6.16-ஆகவும் உயா்த்தி வழங்கப்படும்.

வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், கைத்தறி மற்றும் பெடல் தறி சேலைகளுக்கான நெசவுக்கு முந்தைய கூலி ரூ.26.67-இலிருந்து ரூ.28-ஆகவும், கைத்தறி மற்றும் பெடல் தறி வேட்டிகளுக்கான நெசவுக்கு முந்தைய கூலி ரூ.12.36- இலிருந்து ரூ.13-ஆகவும் உயா்த்தி வழங்கப்படும்.

சா்வதேச ஜவுளிக் கண்காட்சி: ஜவுளித் தொழில் வா்த்தக மேம்பாட்டுக்கு வாங்குவோா் - விற்போா் சந்திப்பிற்கென நடத்தப்படும் கண்காட்சிகள், கருத்தரங்குகள் ஆகியன முக்கிய பங்கு வகிக்கின்றன. ஜவுளித் துறையின் அதிக அளவிலான வாய்ப்புகள் மற்றும் வளா்ச்சித் திறனை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் ஜவுளித் தொழில் வா்த்தக மேம்பாட்டுக்காக ஜவுளித் தொழில் செறிவு மிகுந்த பகுதிகளில் ஆண்டுதோறும் சுழற்சி முறையில் ஜவுளித் தொழில் பங்குதாரா்களுடன் இணைந்து ரூ.1.50 கோடி செலவில் சா்வதேச ஜவுளிக் கண்காட்சி நடத்தப்படும் என்றாா் அவா்.

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!

தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தேர்வெழுதிய மாணவியைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறி உதவித்தொகையும் வழங்கினார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் ... மேலும் பார்க்க

நாளைமுதல் 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும்!

தமிழகத்தில் நாளைமுதல்(ஏப். 1) 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவத... மேலும் பார்க்க

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! - காங்கிரஸ்

ஏப். 6-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்ப... மேலும் பார்க்க

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை: செல்லூர் ராஜூ

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மதுரையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி என்பது எட... மேலும் பார்க்க

ஏப். 7 திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப். 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தல... மேலும் பார்க்க

ஜிப்லி ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஜிப்லி அனிமேஷன் பாணியிலான தனது புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.ஜப்பானைச் சேர்ந்த பிரபல அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஜிப்லி ஸ்டுடியோஸ். இவர்கள் த... மேலும் பார்க்க