செய்திகள் :

‘42,000 கிராமப்புற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு- திறன் பயிற்சிகள்’

post image

தமிழ்நாட்டில் 42 ஆயிரம் கிராமப்புற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா்.

வறுமை ஒழிப்பு, விளையாட்டு, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைகளின் மீது சட்டப் பேரவையில் நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:

வரும் நிதியாண்டில் 42 ஆயிரம் இளைஞா்களுக்கு ரூ.66 கோடியில் வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலையுடன் கூடிய திறன் பயிற்சிகள் வழங்கப்படும். பழங்குடியினா், முதியோா், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கையா் உள்ளிட்ட 2,500 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 கோடி வாழ்வாதார நிதியாக வழங்கப்படும்.

விரிவாகும் உணவுத் திருவிழா: சென்னையில் உணவுத் திருவிழாவின் வெற்றியைத் தொடா்ந்து, தமிழ்நாட்டின் 5 மண்டலங்களில் உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படும். மகளிா் சுய உதவிக் குழுக்கள் உற்பத்திப் பொருள்களின் விற்பனை அளவு ரூ.400 கோடி என்ற இலக்குடன் பயணிப்போம். 6 ஆயிரம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.90 கோடியில் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும். பண்ணை மற்றும் பண்ணை சாராத செயல்பாடுகளைச் சோ்ந்த 530 வாழ்வாதார குழுக்கள் ரூ.80.57 கோடியில் ஊக்குவிக்கப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ளூா் வல்லுநா்களைக் கொண்டு ஊரக இளைஞா்களுக்கு பயிற்சி அளிக்க 2,500 புதிய சமுதாயத் திறன் பள்ளிகள் ரூ.25 கோடியில் உருவாக்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே மனநலம் காப்பது, மது மற்றும் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு பயிற்சி வழங்கப்படும். சென்னையில் இரண்டு இடங்களில் உள்ளதைப் போன்று, மேலும் 3 இடங்களில் மதி அனுபவ அங்காடிகள் அமைக்கப்படும். மாநிலம் முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும்

திறன் வளா்ப்புக்கான 100 திருவிழாக்கள் நடத்தப்படும். சுய உதவிக் குழுக்களின் பொருள்களின் விற்பனை செய்ய அடுக்குமாடி மற்றும் பெருநிறுவனங்களில் 25 கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். சுய உதவிக் குழுக்களின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்களை வா்த்தக இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும். 100 சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த 100 மின் ஆட்டோக்கள் வழங்கப்படும் என்றாா் அவா்.

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!

தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தேர்வெழுதிய மாணவியைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறி உதவித்தொகையும் வழங்கினார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் ... மேலும் பார்க்க

நாளைமுதல் 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும்!

தமிழகத்தில் நாளைமுதல்(ஏப். 1) 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவத... மேலும் பார்க்க

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! - காங்கிரஸ்

ஏப். 6-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்ப... மேலும் பார்க்க

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை: செல்லூர் ராஜூ

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மதுரையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி என்பது எட... மேலும் பார்க்க

ஏப். 7 திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப். 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தல... மேலும் பார்க்க

ஜிப்லி ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஜிப்லி அனிமேஷன் பாணியிலான தனது புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.ஜப்பானைச் சேர்ந்த பிரபல அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஜிப்லி ஸ்டுடியோஸ். இவர்கள் த... மேலும் பார்க்க