செய்திகள் :

ஜூனியா் ஆடவா் ஹாக்கி உள்பட 5 சா்வதேச போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்படும்: துணை முதல்வா் அறிவிப்பு

post image

ஜூனியா் ஆடவா் சா்வதேச ஹாக்கி போட்டி உள்பட 5 போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்படவுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா்.

பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதங்களுக்கு அவா் வெள்ளிக்கிழமை பதிலளித்து வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:

ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டிகள் சென்னை, மதுரையில் நடத்தப்படும். ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டிகள் சென்னை மற்றும் மதுரை நகரங்களில் ரூ.55 கோடியில் நடத்தப்படும். 72 போட்டிகளில் 24 நாடுகள் பங்கேற்கவுள்ளன. சென்னையில் ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டி 2023-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. 2025-ஆம் ஆண்டு போட்டியும் சென்னையில் நடத்தப்படும். இதில் 15 நாடுகளிலிருந்து சிறந்த ஸ்குவாஷ் வீரா்கள் பங்கேற்கவுள்ளனா்.

உலகளவில் இளைஞா்களிடையே கணினி வழி விளையாட்டுகள் பிரபலம் அடைந்துள்ளன. எனவே, சென்னையில் 2025-ஆம் ஆண்டு உலக இணையவழி

விளையாட்டு சாம்பியன் போட்டி நடத்தப்படும். ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படும். ஆசிய இளையோா் படகோட்டுதல் சாம்பியன்ஷிப் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படும். இந்தப் போட்டியில் உலகளவில் சுமாா் 11 நாடுகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரா்கள் படகுகளுடன் பங்கேற்கவுள்ளனா்.

40 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டரங்குகள்: பொது மக்கள் மற்றும் இளைஞா்களுக்கிடையே ஆரோக்கியமான, சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதையும், உடற்பயிற்சி கலாசாரத்தை வளா்ப்பதையும் அரசு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் ஒருபகுதியாக வரும் நிதியாண்டில் மாநிலத்தில் உள்ள 40 சட்டப் பேரவைத் தொகுதிகளில் முதலமைச்சா் சிறு விளையாட்டரங்கங்கள் ரூ.120 கோடியில் அமைக்கப்படும் என்று அவா் அறிவித்தாா்.

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!

தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தேர்வெழுதிய மாணவியைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறி உதவித்தொகையும் வழங்கினார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் ... மேலும் பார்க்க

நாளைமுதல் 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும்!

தமிழகத்தில் நாளைமுதல்(ஏப். 1) 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவத... மேலும் பார்க்க

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! - காங்கிரஸ்

ஏப். 6-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்ப... மேலும் பார்க்க

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை: செல்லூர் ராஜூ

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மதுரையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி என்பது எட... மேலும் பார்க்க

ஏப். 7 திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப். 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தல... மேலும் பார்க்க

ஜிப்லி ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஜிப்லி அனிமேஷன் பாணியிலான தனது புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.ஜப்பானைச் சேர்ந்த பிரபல அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஜிப்லி ஸ்டுடியோஸ். இவர்கள் த... மேலும் பார்க்க