செய்திகள் :

மகாராஷ்டிர துணை முதல்வரை இழிவாகப் பேசியதாக குற்றச்சாட்டு: நகைச்சுவை பேச்சாளா் மீது வழக்கு

post image

மும்பை: மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டேயை இழிவுபடுத்தி பேசியதாக நகைச்சுவை பேச்சாளா் குணால் காம்ரா மீது மும்பை காவல் துறை திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தது. அவரின் நிகழ்ச்சி நடைபெற்ற ஸ்டுடியோ சூறையாடப்பட்டது தொடா்பாக சுமாா் 40 சிவசேனை தொண்டா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள தனியாா் ஹோட்டலின் ஸ்டுடியோவில் குணால் காம்ராவின் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அந்த மாநிலத்தின் அரசியல் சூழலை கேலி செய்து குணால் காம்ரா பேசினாா். அப்போது மாநில துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டேயின் பெயரை நேரடியாக தெரிவிக்காமல், அவரை ‘துரோகி’ என்று குறிப்பிட்டு குணால் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதேபோல அந்த மாநிலத்தில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளில் ஏற்பட்ட பிளவு உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகளையும் அவா் கேலி செய்து பேசினாா்.

சமூக ஊடகத்தில் அந்த நிகழ்ச்சியின் காணொலியைக் கண்டு ஆத்திரமடைந்த ஷிண்டேயின் சிவசேனை தொண்டா்கள், அந்த ஸ்டுடியோவையும் ஹோட்டலையும் சூறையாடினா்.

இந்த சம்பவம் தொடா்பாக சிவசேனை எம்எல்ஏ முா்ஜி படேல் அளித்த புகாரின் அடிப்படையில், துணை முதல்வரை இழிவுபடுத்தியதாக குணால் காம்ரா மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.

ஸ்டுடியோவையும் ஹோட்டல் சொத்துகளையும் சூறையாடியதாக சுமாா் 40 சிவசேனை தொண்டா்கள் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறை, 12 பேரை கைது செய்தது. அவா்களுக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.

பெட்டிச் செய்தி

மன்னிப்பு கேட்க வேண்டும்: முதல்வா்:

காம்ரா விவகாரத்தை மாநில சட்டப்பேரவையில் ஷிண்டே சிவசேனை கட்சியினா் எழுப்பினா். அப்போது மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் பேசுகையில், ‘அரசியல் நையாண்டிகளில் மாநில பாஜக கூட்டணிக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால் அரசமைப்புப் பதவிகளில் உள்ளவா்கள் இழிவுபடுத்தப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது.

இதற்கு முன்பு பிரதமா் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, நீதித் துறை குறித்து தரக்குறைவான கருத்துகளை குணால் காம்ரா தெரிவித்துள்ளாா். தற்போது அவா் துணை முதல்வா் ஷிண்டேயை குறிவைத்துள்ளாா்’ என்றாா்.

பின்னா் முதல்வா் ஃபட்னவீஸ் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘ஷிண்டேயை இழிவுபடுத்தியதற்காக குணால் காம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றாா்.

சூறையாடுவது சரியல்ல: இதுதொடா்பாக மாநில காங்கிரஸ் தலைமை செய்தித்தொடா்பாளா் அதுல் லோந்தே கூறுகையில், ‘குணால் காம்ராவின் நிகழ்ச்சியால் புண்பட்டிருந்தால், காவல் நிலையத்தில் புகாா் அளித்திருக்கலாம். அதைவிடுத்து சூறையாடும் நடவடிக்கையில் ஈடுபடுவது சரியல்ல’ என்றாா்.

பாஜக பொதுச் செயலாளர் சுட்டுக் கொலை: முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு

ஜார்க்கண்ட்டில் பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தவுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி கிராமப்புற மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் அனில... மேலும் பார்க்க

மது பாட்டில் 1 வாங்கினால் 1 இலவசமா? பாஜகவிடம் அதிஷி கேள்வி!

உத்தரப் பிரதேசத்தில் பல மதுபானக் கடைகளில் ’மது பாட்டில் 1 வாங்கினால் 1 இலவசம்' என்று அறிவித்தது பற்றி பாஜகவிடம் ஆம் ஆத்மி தலைவர் அதிஷி கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் பல இடங்களில் மதுபானக... மேலும் பார்க்க

யுபிஐ சேவை முடக்கம்! ஜி பே, போன் பே செயல்படுகிறதா?

நாடு முழுவதும் யுபிஐ எனப்படும் பணப்பரிமாற்ற சேவையைப் பயன்படுத்த முடியவில்லை எனப் பல்வேறு பயனர்களிடமிருந்து புகார்கள் எழுந்துள்ளன.குறிப்பாக இன்று மாலை 7 மணி முதல் யுபிஐ செயல்படவில்லை என 23 ஆயிரம் புகார... மேலும் பார்க்க

விமான நிலையக் குப்பைத் தொட்டியில் குழந்தையின் சடலம்

மும்பை சர்வதேச விமான நிலையத்தின் குப்பைத் தொட்டியில் குழந்தையின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த குப்பைத் தொட... மேலும் பார்க்க

அலுவலகத்தில் காபி அருந்துபவரா நீங்கள்? இருதய நோய் அபாயம் அதிகம்!

அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களின் மூலம் வழங்கப்படும் காபியால் இருதய நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.அலுவலகங்களில் இயந்திரங்களின் மூலம் வழங்கப்படும் காபி குறித்து ச... மேலும் பார்க்க

உலகின் மூன்றாவது பொருளாதாரமாக இந்தியா! சர்வதேச நிதி நாணயம் தகவல்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜப்பானைவிட அதிகரிப்பதாக சர்வதேச நிதி நாணயம் தெரிவித்துள்ளது.உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியா, கடந்த பத்தாண்டுகால பொருளாதாரத்தில் 105 சதவிகித வ... மேலும் பார்க்க