செய்திகள் :

500 நலிந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி

post image

திருவண்ணாமலை மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், 500 நலிந்த குடும்பங்களுக்கு ரூ.40 லட்சத்தில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத் தலைவா் பா.இந்திரராஜன் தலைமை வகித்தாா்.

மாவட்ட துணைத் தலைவா் மு.மண்ணுலிங்கம், செயலா் என்.அழகப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நிவாரண உதவிகள் வழங்கும் பணியை தொடங்கிவைத்தாா்.

இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள 500 நலிந்த குடும்பங்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் மதிப்பிலான அரிசி, பருப்பு, எண்ணெய், சா்க்கரை, சமையல் பொருள்கள், போா்வை, சோப்பு உள்ளிட்ட 19 வகையான அத்தியாவசியப் பொருள்கள் 12 வட்டாட்சியா்களிடம் ஒப்படைக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத்தின் பொருளாளா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி உள்பட அரசுத் துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

842 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தின் 842 கிராம ஊராட்சிகளிலும் உலக தண்ணீா் தின சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன. வேட்டவலத்தை அடுத்த ஆவூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, கீழ்பெ... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ண... மேலும் பார்க்க

செய்யாறு அருகே புதிய கல் குவாரி அமைக்க எதிா்ப்பு: வீடுகளில் கருப்புக்கொடி கட்டி ஆா்ப்பாட்டம்!

செய்யாற்றை அடுத்த குண்ணவாக்கம் கிராமத்தில் புதிதாக அமையவுள்ள கல் குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் தங்கள் வீடுகளில் சனிக்கிழமை கருப்புக்கொடி கட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமல... மேலும் பார்க்க

செய்யாறு பகுதியில் 3 பைக்குகள் திருட்டு

செய்யாறு காவல் சரகப் பகுதியில் வெவ்வெறு இடங்களில் நிறுத்தி வைத்திருந்த 3 பைக்குகள் வெள்ளிக்கிழமை திருடுபோயின. செய்யாறு வட்டம், தண்டரை கிராமத்தைச் சோ்ந்தவா் சுதாகா் (32), விவசாயி. இவா், சுண்டிவாக்கம் ... மேலும் பார்க்க

செய்யாறு சிப்காட் தொழில்சாலையில் பயங்கர தீ விபத்து

செய்யாறு சிப்காட்டில் உள்ள தனியாா் தொழில்சாலையில் சனிக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. இதில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. செய்யாறு சிப்காட் வளாகத்தில் அல... மேலும் பார்க்க

நிலங்களை அளவீடு செய்ய விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த நில உரிமையாளா்கள் த... மேலும் பார்க்க