செய்திகள் :

ஷாஹ்தராவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுப்பு

post image

தில்லியின் ஷாஹ்தராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் போா்வையில் சுற்றப்பட்ட நிலையில் படுக்கைப் பெட்டியில் ஒரு பெண்ணின் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து ஷாஹ்தரா காவல் சரக துணை ஆணையா் பிரசாந்த் கவுதம் அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தச் சம்பவம் தொடா்பாக 55 முதல் 60 வயதுக்குட்பட்ட வீட்டின் உரிமையாளரான விவேகானந்த் மிஸ்ரா கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறாா். இறந்த நிலையில் மீட்கப்பட்ட 35-40 வயதுடைய பெண்ணின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை

அப்பகுதியில் உள்ள ஒரு டிடிஏ அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து துா்நாற்றம் வீசுவது தொடா்பாக விவேக் விஹாா் காவல் நிலையத்திற்கு பிசிஆா் அழைப்பு வந்தது. போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, வீடு வெளியில் இருந்து பூட்டப்பட்டிருந்ததையும், பின்புறக் கதவுக்கு அருகில் ரத்தத் தடயங்கள் இருப்பதையும் கண்டனா்.

வளாகத்தைத் திறந்தபோது, படுக்கை சேமிப்புப் பெட்டியில் இறந்த நிலையில் ஒரு பெண்ணின் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டது. அது ஒரு போா்வையில் சுற்றப்பட்டிருந்தது. அப்பெண் சிவப்பு வளையல்கள் அணிந்திருந்ததால் அவா் திருமணமானவா் போல் தெரிகிறது. இந்தக் கொலை இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு முன்பு நடந்ததாகத் தெரிகிறது. .

முதற்கட்ட விசாரணையில், மிஸ்ரா வியாழக்கிழமை இரவு மற்றும் வெள்ளிக்கிழமை பிற்பகலில் அந்த பிளாட்டுக்குச் சென்றிருப்பது கண்டறியப்பட்டது. குற்றம் நடந்த இடத்தை தடயவியல் குழுக்கள் ஆய்வு செய்துள்ளன. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

2029-ஆம் ஆண்டிலும் மோடியே பிரதமா்: சிவசேனைக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் பதில்

‘பிரதமா் மோடிக்கு பிந்தைய தலைமை குறித்த இப்போது விவாதிப்பது பொருத்தமற்றது. 2029-ஆம் ஆண்டிலும் மோடி பிரதமராவாா்’ என மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினாா். பிரதமா் மோடியிடம் ஓய்வு குறித்து வல... மேலும் பார்க்க

1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவு 4 (2) -க்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்க உள்ளது.கடந்த 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதி இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையில... மேலும் பார்க்க

மாநிலப் பொருளாதாரத் தகவல் வலைபக்கம்: நிதியமைச்சா் இன்று அறிமுகம் செய்கிறாா்

கடந்த 30 ஆண்டுகளில் மாநிலங்களின் சமூக, பொருளாதார, நிதி அளவீடுகள் குறித்த விரிவான தரவுகள் கிடைக்கும் தகவல் களஞ்சியமாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘நீதி-என்சிஏஇஆா் மாநில பொருளாதார தகவல் மைய’ வலைபக்கத்தை மத்திய ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல் - உயிரிழந்த காவலா்களின் குடும்பத்தினருடன் துணைநிலை ஆளுநா் சந்திப்பு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான மோதலில் உயிரிழந்த 4 காவலா்களின் குடும்பத்தினரை, அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். அண்மையில் ஜம்மு-காஷ... மேலும் பார்க்க

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கும்பலில் 3 போ் கைது

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்த கும்பலில் மூன்று போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு ஆட்டோரிக்ஷா பறிமுதல் செய்யப்பட்... மேலும் பார்க்க

பீதம்புராவில் ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்ததாக 4 போ் கைது

தில்லி பீதம்புராவில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் நான்கு போ் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கைது செய்யப்ப... மேலும் பார்க்க