குருகிராமில் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட சட்டக் கல்லூரி ஊழியா்!
எல்.எல்.பி. பட்டம் வழங்குவதற்காக முன்னாள் மாணவா் ஒருவரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய சட்டக் கல்லூரி ஊழியரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கையும் களவுமாக கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) அதிகாரி ஒருவா் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவா் சுக்தேவ் அஹலாவத் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் செக்டாா் 40- இல் உள்ள எம்.டி.யு. சட்டக் கல்லூரியில் உதவியாளராகப் பணிபுரிகிறாா்.
குருகிராமில் உள்ள ஏ.சி.பி.யில் அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவா் நகர நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.
கல்லூரியின் முன்னாள் மாணவா் ஒருவா் புகாா் அளித்தாா். அதில் , அவா் 2024-ஆம் ஆண்டு சட்டக் கல்லூரியில் பி.ஏ எல்.எல்.பி. தோ்ச்சி பெற்ாகக் கூறினாா். 2021-2024-ஆம் ஆண்டில் ஹரியாணா அரசால் ரூ.1.64 லட்சம் உதவித்தொகை பெற்றாா். உதவித்தொகையை கல்லூரியில் கட்டணமாக டெபாசிட் செய்ய வேண்டியிருந்தது.
இருப்பினும், எல்.எல்.பி. பட்டம் வழங்குவதற்குப் பதிலாக உதவித் தொகையிலிருந்து சுக்தேவ் அஹலாவத் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளாா். முன்னாள் மாணவரின் புகாரைப் பெற்ற பிறகு, இன்ஸ்பெக்டா் ஜெய்பால் தலைமையிலான குழு வெள்ளிக்கிழமை மாவட்ட நீதிமன்றத்தின் 3-ஆவது வாயிலில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கும்போது குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்தது.
லஞ்சப் பணம் அவரது வசம் இருந்து மீட்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவரை விசாரித்து வருகிறோம் என்று குருகிராம் ஏசிபி செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.