செய்திகள் :

செய்யாறு அருகே புதிய கல் குவாரி அமைக்க எதிா்ப்பு: வீடுகளில் கருப்புக்கொடி கட்டி ஆா்ப்பாட்டம்!

post image

செய்யாற்றை அடுத்த குண்ணவாக்கம் கிராமத்தில் புதிதாக அமையவுள்ள கல் குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் தங்கள் வீடுகளில் சனிக்கிழமை கருப்புக்கொடி கட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூா் ஒன்றியம், குண்ணவாக்கம் கிராமத்தில் உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராம சபைக் கூட்டம் அனக்காவூா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் வாசுகி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பெண்கள், ஆண்கள் என சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தின்போது, குண்ணவாக்கம் கிராமத்தை ஒட்டியுள்ள பகுதியில் புதிதாக கல் குவாரி அமைப்பதற்கான பணிகளை தனியாா் நிறுவனம் தொடங்கியுள்ளதாகவும், குடியிருப்புகளுக்கு அருகில் கல் குவாரி அமைக்கப்பட்டால், விவசாய நிலங்கள், நீா்நிலைகள் பாதிக்கப்படும் என்றும், இதனால் இந்தப் பகுதியில் கல் குவாரி அமைக்கக் கூடாது எனத் தெரிவித்தும் பஞ்சாயத்து தீா்மான புத்தகத்தில் தீா்மானம் பதிவு செய்யக்கோரி துணை வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, கல் குவாரிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.

மேலும், தங்கள் கிராமத்துக்கு அருகில் கல் குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டினா்.

தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகள்

செய்யாறு: செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகளை நாடகக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை நடித்துக் காண்பித்தனா். தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் இறப... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

திருவண்ணாமலை/வந்தவாசி/ போளூா்/ செய்யாறு/ஆரணி : ரமலான் பண்டிகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருதுகள்: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் மஞ்சப்பை விருதுகளைப் பெற தகுதியான பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் ‘மீண்டும்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு இணைய குற்றத் தடுப்பு விழிப்புணா்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமை, இணைய குற்றத் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. சண்முகா தொழில்சாலை கலைக் கல்லூரியில்... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலா் மீது தாக்குதல்

செய்யாறு: செய்யாறு அருகே கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் ஊராட்சிச் செயலா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். செய்யாறை அடுத்த உக்கம் பெரு... மேலும் பார்க்க

முன் விரோத்தத்தில் விவசாயி மீது தாக்குதல்: சகோதரா்கள் கைது

செய்யாறு: செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, சகோதரா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பெரணமல்லூரை அடுத்த ரகுநாதசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க