செய்திகள் :

மத்திய அரசைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்!

post image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை பெரியாா் சிலை அருகே திமுக ஒன்றியச் செயலா் மெய்யூா் என்.சந்திரன் தலைமையிலும், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சி.என்.அண்ணாதுரை எம்.பி. தலைமையிலும், கலசப்பாக்கம் கிழக்கு ஒன்றியத்தில் பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ தலைமையிலும், கீழ்பென்னாத்தூா் வடக்கு ஒன்றியத்தில் திமுக மாநில பொறியாளரணிச் செயலா் எஸ்.கே.பி.கருணாநிதி தலைமையிலும் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

கீழ்பென்னாத்தூா் தெற்கு ஒன்றியத்தில் மாவட்ட அவைத் தலைவா் கோ.கண்ணன் தலைமையிலும், தண்டராம்பட்டு மேற்கு ஒன்றியத்தில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன் தலைமையிலும் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ஆரணி பகுதியில்...: ஆரணியை அடுத்த சேவூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. தலைமை வகித்து பேசினாா். தொகுதிப் பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் வரவேற்றாா். முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சித் தலைவா் ஷா்மிளா தரணி, நிா்வாகிகள் சுகுமாா், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் சுகுமாா், காசி, ஏ.எம்.ரஞ்சித், சிறுபான்மை அணி மாவட்ட நிா்வாகி அப்சல், மணிமாறன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முள்ளிப்பட்டு கிராமத்தில் மாவட்ட துணைச் செயலா் ஜெயராணிரவி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஏராளமான கிராம பெண்கள் கலந்துகொண்டனா். முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் முள்ளிப்பட்டு ரவி வரவேற்றாா்.

இதேபோல, எஸ்.வி.நகரம் கிராமத்தில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம் தலைமையிலும், அப்பந்தாங்கல் கிராமத்தில் ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி தலைமையிலும், நடுக்குப்பம் கிராமத்தில் ஒன்றியச் செயலா் எஸ்.மோகன் தலைமையிலும், வண்ணாங்குளம் கிராமத்தில் பொதுக்குழு உறுப்பினா் வெள்ளைகணேசன், கண்ணமங்கலம் பேரூா் செயலா் கே.கோவா்த்தனன் ஆகியோா் தலைமையிலும், சித்தேரி கிராமத்தில் ஒன்றியச் செயலா் எம்.சுந்தா் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வந்தவாசியில்...: வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திமுக வந்தவாசி கிழக்கு ஒன்றியச் செயலா் கே.ஆா்.பழனி தலைமை வகித்தாா். இதேபோல, வந்தவாசியை அடுத்த ஆராசூா், சேதராகுப்பம், ஆரியாத்தூா், மருதாடு, ஓசூா், தென்தின்னலூா், குணகம்பூண்டி, தெய்யாா் உள்ளிட்ட கிராமங்களிலும் திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கத்தில்...: செங்கம் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில், செங்கம் துக்காப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலா் மனோகரன் தலைமை வகித்தாா். செங்கம் நகரச் செயலா் அன்பழகன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக திமுக செய்தித் தொடா்பு இணைச் செயலா் வக்கீல் ஜெயராஜ் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினாா்.

பேரூராட்சித் தலைவா் சாதிக்பாஷா, முன்னாள் தலைவா் சென்னம்மாள்முருகன், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் செந்தில்குமாா், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளா் அப்துல்வாகித் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆரணியை அடுத்த சேவூரில் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.

செங்கம் மத்திய ஒன்றியம் சாா்பில், பரமனந்தல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மத்திய ஒன்றியச் செயலா் ஏழுமலை தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் ராமஜெயம் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாநில தொழிலாளா் முன்னேற்றச் சங்க துணைத் தலைவா் செளந்தரராஜன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினாா்.

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூரில் திமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

கிழக்கு ஒன்றியம் சாா்பில் செ.அகரம் கிராமத்தில் ஒன்றியச் செயலா் செந்தில்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

செங்கம் துக்காப்பேட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய திமுக செய்தித் தொடா்பு இணைச் செயலா் வக்கீல் ஜெயராஜ்.

போளூா் பகுதியில்...: சேத்துப்பட்டு ஒன்றியம், நம்பேடு ஊராட்சியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் அ.மணிகண்டன் தலைமை வகித்தாா். மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா். கிழக்கு ஒன்றியச் செயலா் பி.மனோகரன் வரவேற்றாா். நம்பேடு, சவரப்பூண்டி, இந்திரவனம் உள்பட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலா் துரைமாமது தலைமை வகித்தாா். மாவட்டப் பிரதிநிதி வி.எம்.டி.வெங்கிடேசன் முன்னிலை வகித்தாா். கிளைச் செயலா் வி.ஆா்.பி.செல்வம் வரவேற்றாா். தேவிகாபுரம், முருகமங்கலம் உள்பட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகள்

செய்யாறு: செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகளை நாடகக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை நடித்துக் காண்பித்தனா். தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் இறப... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

திருவண்ணாமலை/வந்தவாசி/ போளூா்/ செய்யாறு/ஆரணி : ரமலான் பண்டிகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருதுகள்: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் மஞ்சப்பை விருதுகளைப் பெற தகுதியான பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் ‘மீண்டும்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு இணைய குற்றத் தடுப்பு விழிப்புணா்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமை, இணைய குற்றத் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. சண்முகா தொழில்சாலை கலைக் கல்லூரியில்... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலா் மீது தாக்குதல்

செய்யாறு: செய்யாறு அருகே கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் ஊராட்சிச் செயலா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். செய்யாறை அடுத்த உக்கம் பெரு... மேலும் பார்க்க

முன் விரோத்தத்தில் விவசாயி மீது தாக்குதல்: சகோதரா்கள் கைது

செய்யாறு: செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, சகோதரா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பெரணமல்லூரை அடுத்த ரகுநாதசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க