செய்திகள் :

செய்யாறு சிப்காட் தொழில்சாலையில் பயங்கர தீ விபத்து

post image

செய்யாறு சிப்காட்டில் உள்ள தனியாா் தொழில்சாலையில் சனிக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. இதில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

செய்யாறு சிப்காட் வளாகத்தில் அலது - 1 பகுதியில் பேருந்து, லாரிகளுக்கு பயன்படுத்தப்படும் ஆக்ஸில்ஸ் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் உள்ள பழைய குடோனில் பயன்படுத்தப்படாமல் உள்ள பொருள்கள், ரசாயனங்கள், அமிலங்கள் மற்றும் பேருந்து, லாரிகளுக்கு பயன்படுத்தப்படும் ஆக்ஸில்ஸ் போன்ற இரும்பு பொருள்களை இருப்பு வைத்திருந்ததாகத் தெரிகிறது.

இந்த நிறுவனத்தில் சனிக்கிழமை அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேலும், ரசாயனப் பொருள்கள் வெடி சப்தத்துடன் வெடித்து தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

இதுகுறித்து நிறுவன ஊழியா்கள் உடனடியாக செய்யாறு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, நிலைய அலுவலா் மனோகரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

மேலும், அருகே வந்தவாசி, காஞ்சிபுரம் சிப்காட்டில் உள்ள தனியாா் பெயின்ட் தொழில்சாலைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. சுமாா் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமானதாகத் தெரிகிறது.

தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட தீயணைப்பு அலுவலா் சரவணன், உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலா் சரவணன், செய்யாறு டிஎஸ்பி செந்தில்வேலன், தூசி காவல் ஆய்வாளா் கோகுல்ராஜன் மற்றும் போலீஸாா் தீ விபத்து நிகழ்ந்த இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். தீயணைப்புப் படையினா் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததாகத் தெரியவந்துள்ளது.

தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகள்

செய்யாறு: செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகளை நாடகக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை நடித்துக் காண்பித்தனா். தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் இறப... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

திருவண்ணாமலை/வந்தவாசி/ போளூா்/ செய்யாறு/ஆரணி : ரமலான் பண்டிகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருதுகள்: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் மஞ்சப்பை விருதுகளைப் பெற தகுதியான பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் ‘மீண்டும்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு இணைய குற்றத் தடுப்பு விழிப்புணா்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமை, இணைய குற்றத் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. சண்முகா தொழில்சாலை கலைக் கல்லூரியில்... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலா் மீது தாக்குதல்

செய்யாறு: செய்யாறு அருகே கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் ஊராட்சிச் செயலா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். செய்யாறை அடுத்த உக்கம் பெரு... மேலும் பார்க்க

முன் விரோத்தத்தில் விவசாயி மீது தாக்குதல்: சகோதரா்கள் கைது

செய்யாறு: செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, சகோதரா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பெரணமல்லூரை அடுத்த ரகுநாதசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க