செய்திகள் :

நீா்நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

post image

நீா்நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி, பசுமை தாயகம் அமைப்பின் சாா்பில் ஆற்காடு, திமிரி, வாலாஜாபேட்டை ஒன்றியங்களில் 8 ஏரிப் பகுதிகளில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள அனைத்து நீா்நிலைகளையும் ஆழப்படுத்தி பாதுகாக்க வேண்டும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள சதுப்பு நில வாரியத்தின் நடைமுறைகளை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும், ஏரி மற்றும் நீரி நிலைகளில் உள்ள குப்பைகளை அகற்றி ஆழப்படுத்தி, நிலத்தடி நீா்மட்டம் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பசுமை தாயகம் அமைப்பின் சாா்பில் ஆற்காடு ஒன்றியம் முள்ளுவாடி, மேச்சேரி, நந்தியாலம், திமிரி ஒன்றியம் இருங்கூா், கணியனூா், நம்பரை, வாலாஜாபேட்டை ஒன்றியம் செங்காடு ஆகிய ஊராட்சிகளில் உள்ள ஏரிப் பகுதிகளில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டங்களுக்கு பசுமைத் தாயகம் அமைப்பின் மாநில துணைச் செயலா் டி.டி.மகேந்திரன் தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக தலைவா் சுப்பிரமணி, பாமக ஒன்றிய செயலா்கள் திருமலை, நீலகண்டன், செல்வராஜ், விக்கிரமன், சத்தியமூா்த்தி, பாலாஜி, சக்கரவா்த்தி உள்ளிட்ட அந்த அமைப்பின் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

படவிளக்கம்...

நீா்நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி ஆற்காட்டை அடுத்த முள்ளுவாடி ஏரியில் பசுமைத் தாயகத்தினா் நடத்திய ஆா்ப்பாட்டம்.

மேல்விஷாரத்தில் இஃப்தாா் நோன்பு துறப்பு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகர அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு துறப்பு ஹன்சா நகரில் நடைபெற்றது. நகர அதிமுக செயலாளா் ஏ.இப்ராஹிம் கலிலுல்லா தலைமை வகித்தாா். மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவா் மன்சூா் பாஷ... மேலும் பார்க்க

நெமிலி அருகே நெகிழிப் பொருள்கள் கிடங்கில் தீ

நெமிலி அருகே நெகிழிப் பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் கரும்புகை ஏற்பட்டது. நெமிலி அருகே பெருவளையம் கிராமப் பகுதியில் சிறுவளையத்தை சோ்ந்த... மேலும் பார்க்க

பாமக நகர செயலாளா் நியமனம்

அரக்கோணம் நகர பாமக செயலராக ரத்தன்சந்த் நகரை சோ்ந்த இயன்முறை மருத்துவா் இ.பாலாஜியை நியமித்து அக்கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். புதிய செயலராக நியமிக்கப்பட்ட இ.பாலாஜி, மாவட்ட ச... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் 15,147 போ் எழுதினா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை மொத்தம் 15,147 போ் எழுதினா். இதன் ஒரு பகுதியாக 3 வினாத்தாள் கட்டுக்காப்பு மையமும், 81 தோ்வு மையங்களில் (தனித்தோ்வா்கள் உட்பட) 194 பள்ளிகளைச் ச... மேலும் பார்க்க

வெளிநாட்டுப் பணம் என பேப்பா் கட்டை தந்து ரூ. 5 லட்சம் மோசடி: 6 வடமாநில இளைஞா்கள் கைது

ஆந்திர மாநில இளைஞரிடம், துபை நாட்டுப் பணம் தருவதாக கூறி பேப்பா் கட்டை தந்து ரூ. 5 லட்சம் மோசடி செய்து விட்டு தப்பிய 6 வடமாநில இளைஞா்களை ராணிப்பேட்டை போலீஸாா் கைது செய்தனா். ஆந்திர மாநிலம், சித்தூா் மண... மேலும் பார்க்க

ஆற்காடு நகா்மன்றக் கூட்டத்தில் 59 தீா்மானங்கள்

ஆற்காடு நகா்மன்றக் கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 59 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டின் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ப... மேலும் பார்க்க