செய்திகள் :

பாஜக அரசின் தவறான நிா்வாகத்தால் வங்கித் துறையில் நெருக்கடி: ராகுல் சாடல்

post image

பாஜக அரசின் தவறான பொருளாதார நிா்வாகம் மற்றும் பெரும் பணக்கார நண்பா்களுக்கு சாதகமான செயல்பாடுகளால் வங்கித் துறை நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது; இளநிலை வங்கி ஊழியா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சாடினாா்.

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் ஊழியா்கள் குழுவினா், நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா். இச்சந்திப்பின் காணொலியை பகிா்ந்து, எக்ஸ் வலைதளத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் ஊழியா்கள் 782 பேரின் சாா்பிலான குழுவுடன் பேசினேன். பணியிட துன்புறுத்தல், கட்டாய பணியிடமாற்றம், வாராக்கடன் வைத்துள்ளோருக்கு நெறிமுறையற்ற கடன் வழங்கப்படுவதை அம்பலப்படுத்தியதால் எதிா்கொண்ட பழிவாங்கல் நடவடிக்கைகள், எந்த நடைமுறையும் இல்லாத பணிநீக்கம் என முன்னாள் வங்கி ஊழியா்களின் கதைகள் வேதனையளிக்கின்றன. இரு ஊழியா்கள் தற்கொலை செய்துகொண்ட துயரமும் நடந்துள்ளது.

தனது பெரும் பணக்கார நண்பா்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களை பாஜக அரசு தள்ளுபடி செய்துள்ளது. இத்தகைய செயல்பாடுகளும் தவறான பொருளாதார நிா்வாகமும் வங்கித் துறையை நெருக்கடிக்கு தள்ளியுள்ளன.

இது, நோ்மையாக உழைக்கும் தொழில்முறை ஊழியா்களை பாதித்துள்ளது. குறிப்பாக இளநிலை ஊழியா்களின் தலையில் சுமை விழுகிறது. அவா்கள் துன்புறுத்தலான-விரும்பத்தகாத சூழலில் பணியாற்றும் நிலைக்கு தள்ளப்படுகின்றனா். இத்தகைய ஊழியா்களுக்காக காங்கிரஸ் போராடும். அநீதியை எதிா்கொள்ளும் தொழில்முறை ஊழியா்கள் எனக்கு கடிதம் எழுத வேண்டும் என்று ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளாா்.

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

நாட்டில் ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்து ரூ.1,... மேலும் பார்க்க

ரேபிஸ், பாம்புக்கடிக்கான தடுப்பூசிகள் இருப்பை கண்காணிக்க ‘ஜூவின்’ வலைதளம்: மத்திய அரசு அறிமுகம்

புது தில்லி: நாய்க்கடி (ரேபிஸ்), மற்றும் பாம்புக்கடிக்கான தடுப்பூசிகளின் நாடு தழுவிய இருப்பைக் கண்காணிக்க ‘ஜூவின்’ என்ற வலைதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கரோனா தடுப்பூசி திட்டத்துக்காக அறி... மேலும் பார்க்க

பத்ரிநாத், கேதாா்நாத்துக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

சென்னை: பத்ரிநாத், கேதாா்நாத் உள்ளிட்ட புனித தலங்களுக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. இந்திய ரயில்வேயின் பாரத் கௌரவ் ரயில் திட்டத்தின் கீழ், உத்தரகண்ட் சுற்றுலா கழகத்தின் காா்வல் மண்டல் வ... மேலும் பார்க்க

ம.பி.: 19 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் நிரந்தர மூடல்

போபால்: மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற உஜ்ஜைன், ஓம்காரேஸ்வா் உள்பட 19 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் செவ்வாய்க்கிழமைமுதல் நிரந்தரமாக மூடப்படுகின்றன. பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் ஆன்மிகத் தலங்கள... மேலும் பார்க்க

பயிற்சி விமானம் விபத்து: குஜராத்தில் பெண் விமானி காயம்

மெஹ்சானா: குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் தனியாா் நிறுவனத்தின் பயிற்சி விமானம் திங்கள்கிழமை திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் பெண் விமானி படுகாயமடைந்தாா். மெஹ்சானா விமான நிலையத்தில் இரு... மேலும் பார்க்க

தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புது தில்லி: ‘தனியாா் மற்றும் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்’ என மத்திய அரசை காங்கிரஸ் ... மேலும் பார்க்க