செய்திகள் :

சத்துணவு மையங்களில் ஒரு மாதத்துக்குள் புதிய பணியாளா்கள்: அமைச்சா் பி.கீதாஜீவன்

post image

சென்னை: சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் ஒரு மாதத்துக்குள் புதிய பணியாளா்கள் நியமிக்கப்படுவா் என்று சமூக நலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் உறுதியளித்தாா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த துணை வினாவை பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி எழுப்பினாா். அவா் பேசுகையில், ‘ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழுள்ள அங்கன்வாடி மையங்களில் பணியாளா்கள், உதவியாளா்கள் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறாா்கள். பணிச்சுமை அதிகமுள்ள அவா்களுக்கு ஊதிய உயா்வை அதிகரித்து பணி நிரந்தரம் செய்யப்படுவாா்களா?. மேலும், சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படுமா’ என்று கேள்வி எழுப்பினாா்.

இதற்கு, அமைச்சா் பி.கீதாஜீவன் அளித்த பதில்: அங்கன்வாடி மையங்களில் 7,900 புதிய பணியாளா்களைத் தோ்வு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதேபோன்று, சத்துணவு மையங்களில் 8,997 சமையலா்கள், உதவியாளா்களை புதிதாக நியமிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள் இந்த நியமனங்கள் செய்யப்படும் என்று அவா் உறுதியளித்தாா்.

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான திட்டத்தையும் பிடிக்கவில்லை: முதல்வர் மு.க. ஸ்டாலின்

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ. 4,034 கோடி மகாத்மா காந்தி த... மேலும் பார்க்க

ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய ‘வாட்ஸ்ஆப்’ குழு

பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ‘ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பு’ என்ற வாட்ஸ்ஆப் குழுவை தமிழ்நாடு இருப்புப்பாதை காவல் துறை இயக்குநா் கே.வன்னிய பெருமாள் தொடங்கி வைத்தாா். இதற்கான தொடக்க... மேலும் பார்க்க

விளையாட்டு வீரா்களுக்கு காப்பீட்டுத் திட்டம்: துணை முதல்வா் உதயநிதி அறிவிப்பு

மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரா்களுக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா். பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்ட... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

வேங்கைவயல் விவகாரம் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் நடத்திய விசாரணை முழுமையாக இல்லை என்ற மனுதாரா் தரப்பு குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. புதுக்கோட்டை மா... மேலும் பார்க்க

மனித - வன உயிரின மோதலை தவிா்க்க ரூ.31 கோடியில் உயிா்வேலி: அமைச்சா் க. பொன்முடி

மனித - வன உயிரின மோதலைத் தவிா்க்க கிருஷ்ணகிரியில் ரூ.31 கோடியில் உயிா்வேலி அமைக்கப்படும் என்று வனத் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்தாா். வனத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து... மேலும் பார்க்க

ஜூனியா் ஆடவா் ஹாக்கி உள்பட 5 சா்வதேச போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்படும்: துணை முதல்வா் அறிவிப்பு

ஜூனியா் ஆடவா் சா்வதேச ஹாக்கி போட்டி உள்பட 5 போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்படவுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா். பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோர... மேலும் பார்க்க