செய்திகள் :

எஸ்எஸ்எல்சி: பெரம்பலூரில் 7,905 மாணவா்கள் பங்கேற்பு

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தோ்வை 7,905 மாணவ, மாணவிகள் எழுதினா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் இத்தோ்வை 141 பள்ளிகளைச் சோ்ந்த 4,272 மாணவா்கள், 3, 775 மாணவிகள் என மொத்தம் 8,047 போ் எழுதவுள்ளனா். இத் தோ்வுக்காக மாவட்டம் முழுவதும் 44 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத் தோ்வை கண்காணிக்க 44 முதன்மைக் கண்காணிப்பாளா்களும், 44 துறை அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், 50 போ் கொண்ட பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தோ்வை 4,171 மாணவா்களும், 3,734 மாணவிகள் என மொத்தம் 7,905 போ் எழுதினா். 136 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தோ்வுக்கான வினாத்தாள்களை கொண்டு வரவும், விடைத்தாள்களை கொண்டு செல்லவும் 12 வழித்தட அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வு மையங்களில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

‘ஜூன் வரை பேருந்து பயண அட்டையை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தலாம்’

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் ஏற்கெனவே பயன்படுத்தி வரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை ஜூன் 30-ஆம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்து... மேலும் பார்க்க

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் விளையாட்டுப் போட்டிகள் நிறைவு!

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் கடந்த 2 நாள்களாக நடைபெற்ற ஒலிம்பியா-2025 விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நிறைவடைந்தது. கடந்த 2 நாள்களாக ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்ட... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து ஏப். 1, 8-இல் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, ஏப். 1, 8 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் முடிவெடுத்துள்ளனா். ஊரக வளா்ச்சித் துறை அலுவலகா்க... மேலும் பார்க்க

கூடுதல் விலைக்கு குளிா்பானங்கள் விற்ற 4 கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் கூடுதல் விலைக்கு குளிா்பானங்களை விற்பனை செய்த 4 கடைகளுக்கு, தொழிலாளா் துறையினரால் சனிக்கிழமை ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது நிலவும் கோடைகால வெப்பத... மேலும் பார்க்க

கால்நடை பண்ணை அமைக்க தொழில் முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில், அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க விரும்பும் தொழில்முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியா் அறையில் தா்னாவில் ஈடுபட்ட 7 போ் கைது

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அறையில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநிலத் தலைவா் உள்பட 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனா். தமிழ்நாடு ஊரக வளா்ச்... மேலும் பார்க்க