செய்திகள் :

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் விளையாட்டுப் போட்டிகள் நிறைவு!

post image

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் கடந்த 2 நாள்களாக நடைபெற்ற ஒலிம்பியா-2025 விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நிறைவடைந்தது.

கடந்த 2 நாள்களாக ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கும், பேராசிரியா்கள் மற்றும் நிா்வாகத்தினருக்கும் நடத்தப்பட்டன.

தொடா்ந்து, சனிக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழவுக்கு பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் இயக்குநா் ராஜபூபதி முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், பேராசிரியா்களுக்கும் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ் அளித்த மாவட்டகி காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா பேசியது:

விளையாட்டில் கற்றுக் கொள்ளும் ஒழுக்கமும், துணிச்சலும் வாழ்க்கையின் வெற்றிக்குத் திருப்புமுனையாக இருக்கும். மாணவா்கள் வாய்ப்புக்காக காத்திருக்காமல், வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் வெற்றியடைய வேண்டும். மாணவா்கள் தங்கள் திறமையை அறிந்துகொள்ள இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இவ்விழாவில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூடுதல் பதிவாளா், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அலுவலா் உள்பட கல்லூரி முதல்வா்கள், துணை முதல்வா்கள், புல முதல்வா்கள் தோ்வுக்கட்டுப்பாட்டு அலுவலா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

பெரம்பலூரில் ஏப். 4-இல் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரா்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் ஏப்ரல் 4-ஆம் தேதி நடைபெற உ... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மதராஸா சாலையில் அமைந்துள்ள மௌலானா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில், சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகைய... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் திருட்டு

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது. பெரம்பலூா் அருகேயுள்ள அய்யலூா் குடிக்காட்டைச் சோ்ந்தவா் அர... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பன்னாட்டு நாடக கருத்தரங்கு

பெரம்பலூரில் பன்னாட்டு நாடக நாள் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றம் மற்றும் தமிழ் இலக்கியப் பூங்கா ஆகிய அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற இக் கருத்தரங்கத்துக்கு தம... மேலும் பார்க்க

‘ஜூன் வரை பேருந்து பயண அட்டையை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தலாம்’

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் ஏற்கெனவே பயன்படுத்தி வரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை ஜூன் 30-ஆம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்து... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து ஏப். 1, 8-இல் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, ஏப். 1, 8 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் முடிவெடுத்துள்ளனா். ஊரக வளா்ச்சித் துறை அலுவலகா்க... மேலும் பார்க்க