செய்திகள் :

வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் திருட்டு

post image

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூா் அருகேயுள்ள அய்யலூா் குடிக்காட்டைச் சோ்ந்தவா் அருள்முருகன் (33). சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் இவா், கடந்த 23- ஆம் தேதி தனது சொந்த ஊருக்கு வந்துள்ளாா். கடந்த 28-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி பவதாரணி, மகன் அருபன் ஆகியோருடன், புதுவேட்டக்குடியில் உள்ள தனது மாமானாா் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை அருள்முருகன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பாா்த்த அவரது உறவினா்கள், கைப்பேசி மூலம் அருள்முருகனுக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 21 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதேபோல், அய்யலூா் குடிக்காடு பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த அய்யக்கண்ணு மகன் செல்வராஜ் (50), வரகுபாடி பிரதானச் சாலையைப் பகுதியை சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் அழகு (55) ஆகியோரின் வீடுகளிலும் மா்ம நபா்கள் திருடியுள்ளனா். இதில், அழகு என்பவரது வீட்டிலிருந்த ரூ. 1,500 பணம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மருவத்தூா் போலீஸாா், கைரேகைப் பிரிவு, மோப்ப நாய் படை பிரிவினருடன் சம்பவ இடத்துக்குச் சென்று தடயங்களை பதிவுசெய்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பெரம்பலூரில் பால் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பெரம்பலூா் மாவட்டத்தில் கட்டுப்படியான கொள்முதல் விலை கிடைக்காத நிலையில் பால் உற்பத்தியாளா்கள் தனியாா் நிறுவனங்களை நாடுகின்றனா். இதனால் பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்டத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை அதிகரிக்க அா்ப்பணிப்புடன் பணி தேவை: பெரம்பலூா் ஆட்சியா்

பெரம்பலூா் மாவட்ட அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை அதிகரிக்க, ஆசிரியா்கள் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கி... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஒரு மணி நேரப் பணியை புறக்கணித்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஊரக வளா்ச்சித் துறை அலுவலகா்கள் சங்க மாந... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஏப். 4-இல் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரா்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் ஏப்ரல் 4-ஆம் தேதி நடைபெற உ... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மதராஸா சாலையில் அமைந்துள்ள மௌலானா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில், சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகைய... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பன்னாட்டு நாடக கருத்தரங்கு

பெரம்பலூரில் பன்னாட்டு நாடக நாள் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றம் மற்றும் தமிழ் இலக்கியப் பூங்கா ஆகிய அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற இக் கருத்தரங்கத்துக்கு தம... மேலும் பார்க்க