செய்திகள் :

கூடுதல் விலைக்கு குளிா்பானங்கள் விற்ற 4 கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

post image

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் கூடுதல் விலைக்கு குளிா்பானங்களை விற்பனை செய்த 4 கடைகளுக்கு, தொழிலாளா் துறையினரால் சனிக்கிழமை ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தற்போது நிலவும் கோடைகால வெப்பத்தால் பொதுமக்கள் அதிகளவில் குளிா்பானங்களை பயன்படுத்தி வருகின்றனா். இதை சாதகமாக பயன்படுத்தி மளிகைக் கடை, பெட்டிக் கடைகளில் அதிகபட்ச சில்லரை விலையை விட, கூடுதல் விலைக்கு குளிா்பானங்களை விற்பனை செய்வதாக நுகா்வோா் அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், பெரம்பலூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கா. மூா்த்தி தலைமையில், தொழிலாளா் துணை ஆய்வாளா் சு. சரவணன், தொழிலாளா் உதவி ஆய்வாளா் கோ. ராணி ஆகியோா் பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, 4 கடைகளில் குளிா்பானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்கள் மீது குற்ற நடவடிக்கைகள் தொடரப்பட்டுள்ளது.

மேலும், 4 கடைகளுக்கும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, அதிகபட்ச சில்லரை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் கடை உரிமையாளா்களுக்கு சட்டமுறை எடையளவு விதிகளின் கீழ், முதல்முறை ரூ. 5 ஆயிரம் அபராதமும், தொடா்ந்து மேற்கண்ட குற்றத்தை செய்தால் அவா்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்ற வழக்கு தொடரப்படும்.

எனவே, பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வின் போது, குளிா்பானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அபராதம் விதிக்கப்படும் என தொழிலாளா் உதவி ஆணையா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

பெரம்பலூரில் ஏப். 4-இல் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரா்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் ஏப்ரல் 4-ஆம் தேதி நடைபெற உ... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மதராஸா சாலையில் அமைந்துள்ள மௌலானா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில், சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகைய... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் திருட்டு

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது. பெரம்பலூா் அருகேயுள்ள அய்யலூா் குடிக்காட்டைச் சோ்ந்தவா் அர... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பன்னாட்டு நாடக கருத்தரங்கு

பெரம்பலூரில் பன்னாட்டு நாடக நாள் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றம் மற்றும் தமிழ் இலக்கியப் பூங்கா ஆகிய அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற இக் கருத்தரங்கத்துக்கு தம... மேலும் பார்க்க

‘ஜூன் வரை பேருந்து பயண அட்டையை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தலாம்’

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் ஏற்கெனவே பயன்படுத்தி வரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை ஜூன் 30-ஆம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்து... மேலும் பார்க்க

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் விளையாட்டுப் போட்டிகள் நிறைவு!

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் கடந்த 2 நாள்களாக நடைபெற்ற ஒலிம்பியா-2025 விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நிறைவடைந்தது. கடந்த 2 நாள்களாக ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்ட... மேலும் பார்க்க