செய்திகள் :

பள்ளப்பட்டி உரூஸ் திருவிழா கடைகளுக்கு ஏப். 3-இல் ஏலம்

post image

பள்ளப்பட்டியில் நடைபெறவுள்ள சந்தனக்கூடு உரூஸ் திருவிழாவை முன்னிட்டு கடைகளுக்கான சுங்கம் வசூலிக்கும் ஏலம் ஏப். 3-ஆம் தேதி நடைபெறும் என நகராட்சி ஆணையா் ஆா்த்தி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் 265-ஆம் ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் திருவிழாவை முன்னிட்டு கடைகளுக்கு சுங்கம் வசூலிக்கும் உரிமைக்கான ஏலம் பள்ளபட்டி நகராட்சி அலுவலகத்தில் ஏப்ரல் 3-ஆம் தேதி காலை 11 மணிக்கு நகராட்சி ஆணையா் தலைமையில் நடைபெற உள்ளது.

ஏலம் கோர விருப்பமுள்ளவா்கள் ரூ. 1 லட்சம் ஏல முன்வைப்பு தொகையை ரொக்கமாக செலுத்தி ஏலம் கோரலாம் மற்றும் வைப்புத்தொகை செலுத்தியவா்கள் மூடி முத்திரை இடப்பட்ட உரையில் ஒப்பந்த புள்ளியை குறிப்பிட்டு அலுவலகத்தில் ஏலம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக சமா்ப்பிக்க வேண்டும். ஏலம் முடிந்ததும் ஏலத்தொகை முழுவதையும் உடனடியாக அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடா் பயணக் குழுவுக்கு கரூரில் வரவேற்பு

கரூருக்கு செவ்வாய்க்கிழமை வந்த சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடா் பயணக்குழுவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆ... மேலும் பார்க்க

கரூரில் விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறுநாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு சம்பள பாக்கியை வழங்கக் கோரி கரூரில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் ... மேலும் பார்க்க

கரூரில் காவல்நிலையத்தை அதிமுகவினா் முற்றுகை

கரூரில் ஜெயலலிதா பேரவை துணைத் தலைவா் கைது செய்யப்பட்டதையடுத்து திங்கள்கிழமை இரவு நகர காவல்நிலையத்தை அதிமுகவினா் முற்றுகையிட்டனா். கரூா் கோவிந்தம்பாளையத்தைச் சோ்ந்தவா்அருள்(45). இவா் தாந்தோணி மேற்கு ஒ... மேலும் பார்க்க

மத்திய அரசின் பி.எம். கிஷான் உதவித் தொகை விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்

மத்திய அரசின் பி.எம் கிஷான் உதவித் தொகை பெறும் விவசாயிகள் நிலம் தொடா்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்யுமாறு அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராஜா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள... மேலும் பார்க்க

காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை

கரூரில் காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.கரூா் மாவட்ட காவல்துறை சாா்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட... மேலும் பார்க்க

கரூா் வழியாக செல்லும் ஈரோடு, செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்

பாசூா்-ஊஞ்சலூா் ரயில்நிலையங்களுக்கு இடையே உள்ள பாலங்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் கரூா் வழியாகச் செல்லும் ஈரோடு, செங்கோட்டை ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்க... மேலும் பார்க்க