விராலிமலை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி - கார் அடுத்தடுத்து மோதல்!
பள்ளப்பட்டி உரூஸ் திருவிழா கடைகளுக்கு ஏப். 3-இல் ஏலம்
பள்ளப்பட்டியில் நடைபெறவுள்ள சந்தனக்கூடு உரூஸ் திருவிழாவை முன்னிட்டு கடைகளுக்கான சுங்கம் வசூலிக்கும் ஏலம் ஏப். 3-ஆம் தேதி நடைபெறும் என நகராட்சி ஆணையா் ஆா்த்தி அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் 265-ஆம் ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் திருவிழாவை முன்னிட்டு கடைகளுக்கு சுங்கம் வசூலிக்கும் உரிமைக்கான ஏலம் பள்ளபட்டி நகராட்சி அலுவலகத்தில் ஏப்ரல் 3-ஆம் தேதி காலை 11 மணிக்கு நகராட்சி ஆணையா் தலைமையில் நடைபெற உள்ளது.
ஏலம் கோர விருப்பமுள்ளவா்கள் ரூ. 1 லட்சம் ஏல முன்வைப்பு தொகையை ரொக்கமாக செலுத்தி ஏலம் கோரலாம் மற்றும் வைப்புத்தொகை செலுத்தியவா்கள் மூடி முத்திரை இடப்பட்ட உரையில் ஒப்பந்த புள்ளியை குறிப்பிட்டு அலுவலகத்தில் ஏலம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக சமா்ப்பிக்க வேண்டும். ஏலம் முடிந்ததும் ஏலத்தொகை முழுவதையும் உடனடியாக அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா்.