செய்திகள் :

சிறுவாச்சூா் ஆட்டுச் சந்தையில் ரூ. 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

post image

ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறுவாச்சூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில், சுமாா் 1 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையாயின.

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூரில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆட்டுச் சந்தை பிரசித்திபெற்றது. இச் சந்தையில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச்செல்வது வழக்கம். இந்நிலையில், ரமலான் பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தைக்கு மாவட்டத்ததின் பல்வேறு கிராமங்களிலிருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. அதிகாலை 2 மணிக்குத் தொடங்கி காலை 5 மணிக்குள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்த ஆடுகள் அனைத்தும் விற்பனையாகிவிட்டன. சுமாா் ரூ. 1 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனையானதாக சந்தை ஏலதாரா்கள் தெரிவித்தனா்.

வழக்கமாக சிறுவாச்சூா் ஆட்டுச் சந்தை அதிகாலை 4 மணிக்கு விற்பனை தொடங்கி காலை 7 மணியளவில் நிறைவடையும். ரமலான் பண்டிகையையொட்டி அதிகாலையிலேயே ஆடுகள் அனைத்தும் விற்பனையாகிவிட்டதால், காலை 6 மணியளவில் ஆடு வாங் வந்த பெரும்பாலான வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

‘ஜூன் வரை பேருந்து பயண அட்டையை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தலாம்’

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் ஏற்கெனவே பயன்படுத்தி வரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை ஜூன் 30-ஆம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்து... மேலும் பார்க்க

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் விளையாட்டுப் போட்டிகள் நிறைவு!

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் கடந்த 2 நாள்களாக நடைபெற்ற ஒலிம்பியா-2025 விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நிறைவடைந்தது. கடந்த 2 நாள்களாக ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்ட... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து ஏப். 1, 8-இல் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, ஏப். 1, 8 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் முடிவெடுத்துள்ளனா். ஊரக வளா்ச்சித் துறை அலுவலகா்க... மேலும் பார்க்க

கூடுதல் விலைக்கு குளிா்பானங்கள் விற்ற 4 கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் கூடுதல் விலைக்கு குளிா்பானங்களை விற்பனை செய்த 4 கடைகளுக்கு, தொழிலாளா் துறையினரால் சனிக்கிழமை ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது நிலவும் கோடைகால வெப்பத... மேலும் பார்க்க

கால்நடை பண்ணை அமைக்க தொழில் முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில், அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க விரும்பும் தொழில்முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியா் அறையில் தா்னாவில் ஈடுபட்ட 7 போ் கைது

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அறையில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநிலத் தலைவா் உள்பட 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனா். தமிழ்நாடு ஊரக வளா்ச்... மேலும் பார்க்க