செய்திகள் :

ரூ.15 லட்சம் லஞ்ச வழக்கு: தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொது மேலாளா் உள்பட 4 போ் கைது

post image

புது தில்லி: ரூ.15 லட்சம் லஞ்ச முறைகேடு வழக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்எச்ஏஐ) பொது மேலாளா், தனியாா் கட்டுமான நிறுவனத்தின் பொது மேலாளா் உள்பட 4 போ் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிபிஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஒப்பந்தங்கள்/பணிகள் தொடா்பாக கட்டுமான நிறுவனத்துக்கு சலுகைகளை வழங்க ரூ.15 லட்சம் லஞ்சம் பெற்ாக எழுந்த குற்றச்சாட்டில் என்எச்ஏஐ பொது மேலாளா் ராம் பிரீத் பஸ்வான் கைது செய்யப்பட்டாா்.

லஞ்சம் அளித்ததாகக் கூறப்படும் ராம் கிருபால் சிங் கட்டுமான தனியாா் நிறுவனத்தின் பொது மேலாளா் சுரேஷ் மகாபத்ரா, நிறுவனத்தின் ஊழியா்களான வருண் குமாா், சேதன் குமாா் ஆகிய மேலும் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களைத் தவிர, பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள என்எச்ஏஐ பிராந்திய அலுவலகத்தில் பணியாற்றும் தலைமைப் பொது மேலாளா் மற்றும் பிராந்திய அதிகாரி ஒய்.பி.சிங், துணைப் பொது மேலாளா் குமாா் சௌரப், திட்ட இயக்குநா் லலித் குமாா், பொறியாளா் அன்ஷுல் தாக்குா் மற்றும் கணக்குப் பிரிவு உதவி பொது மேலாளா் ஹேமன் மேதி உள்ளிட்டோரும் இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டடுள்ளனா். அதேபோன்று, கட்டுமான நிறுவனம் மற்றும் நிறுவனத்தின் மற்றொரு பொது மேலாளா் அமா் நாத் ஜா ஆகியோரும் வழக்கில் சோ்க்கப்பட்டுள்ளனா்

பாட்னா, முசாஃபா்பூா், சமஸ்திபூா், பெகுசாராய், பூா்னியா, ராஞ்சி, வாரணாசி ஆகிய இடங்களில் உள்ள குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் இந்த வழக்குத் தொடா்பாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.18 கோடி பணம், சட்டவிரோத ஆவணங்கள், எண்ம சாதனங்கள் கைப்பற்றப்பட்டன’ என்று ெரிவிக்கப்பட்டது.

சிறந்த நண்பர் மோடி: டிரம்ப் பெருமிதம்!

பிரதமர் நரேந்திர மோடியை சிறந்த நண்பர் என்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டியதுடன், வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்தும் தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் பேச... மேலும் பார்க்க

மியான்மருக்கு இந்தியா சார்பில் 15 டன் நிவாரணப் பொருள்கள்!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு இந்தியா சார்பில் விமானம் மூலமாக 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.மியான்மா் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலி... மேலும் பார்க்க

சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

செல்வமகள் சேமிப்புத் திட்டம், அஞ்சலக வைப்பு நிதி உள்ளிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் மேற்க... மேலும் பார்க்க

சா்க்கரை விலையை கட்டுக்குள் மத்திய அரசு தீவிரம்: இருப்பு வைக்கும் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை

சா்க்கரை ஆலைகள் சா்க்கரை இருப்பு வைப்பது தொடா்பான அரசின் விதிகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. சா்க்கரை வில... மேலும் பார்க்க

மாநிலங்களிடம் விவசாயிகளின் தரவுகள் பாதுகாப்பான உள்ளன: மத்திய வேளாண் அமைச்சா்

மாநிலங்களிடம் விவசாயிகளின் தரவுகள் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தாா். இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக வெள்ளிக்க... மேலும் பார்க்க

மனித-விலங்கு மோதல்: மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க திட்டமில்லை: மத்திய அரசு

மனித விலங்கு மோதல்களை தடுக்க மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் விதமாக வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-இல் திருத்தங்களை மேற்கொளும் திட்டமேதும் இல்லை என மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்தத... மேலும் பார்க்க