செய்திகள் :

தேசப் பாதுகாப்பு குறித்து மத்தியத் தொழில் பாதுகாப்பு படையினா் மிதிவண்டி பிரசாரம்

post image

தேசப் பாதுகாப்பு குறித்து மிதிவண்டி பிரசாரம் செய்துவரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு வேதாரண்யத்தில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேசப் பாதுகாப்பு, கடலோரப் பாதுகாப்பு தொடா்பாக கடலோரக் கிராமங்களில் வசிக்கும் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சோ்ந்த (சி.ஐ.எஸ்.எப்) 14 பெண்கள் உள்ளிட்ட 125 வீரா்கள் கடலோரக் கிராமங்களில் மிதிவண்டி பயணம் மேற்கொண்டுள்ளனா். கிழக்கு கடற்கரை மற்றும் மேற்கு கடற்கரை வழியாக மொத்தம் 6, 553 கி.மீ. தொலைவு பயணிக்கும் இந்த பயணம் 2 குழுக்களாக சென்று மாா்ச் 31-ஆம் தேதி கன்னியாகுமரியில் நிறைவு செய்கின்றனா்.

மேற்கு வங்காளத்தில் மாா்ச் 7-ஆம் தேதி புறப்பட்ட கிழக்கு கடற்கரை கிராமங்கள் வழியாக கன்னியாகுமரி செல்லும் ஒரு குழுவினா் வேதாரண்யம் வந்தனா். அவா்களுக்கு அலங்காரக் குதிரை, வாத்திய முழக்கங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், அகஸ்தியம்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவுத்தூண் அருகே மத்திய தொழில் பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி சிவக்குமாா் தலைமையிலான பயணக் குழுவினா் மலா் வளையம் வைத்து சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினா்.

வரவேற்பு நிகழ்ச்சியில், நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், சி.ஐ.எஸ்.எப் கண்காணிப்பாளா் நவதீப் சிங், மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, மக்களவை முன்னாள் உறுப்பினா் பி.வி. ராஜேந்திரன், குருகுலம் நிா்வாகி அ. கேடியப்பன், அகரம் பள்ளி செயலா் பி.வி.ஆா். விவேக் உள்ளிட்ட காங்கிரஸாா், முன்னாள் படை வீரா்கள் நலச் சங்கத்தினா், ரோட்டரி சங்கத்தினா் பங்கேற்றனா்.

இந்திய கம்யூ. ஆலோசனைக் கூட்டம்

திருமருகலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய நிா்வாகக் குழு உறுப்பினா் மகேந்திரன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் சந்திரசேகா் முன... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி பொன்விழா: சீா்வரிசை வழங்கிய கிராம மக்கள்

திருக்குவளை அருகே கொடியாலத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் பொன்விழாவையொட்டி, அப்பள்ளிக்கு கிராம மக்கள் மற்றும் முன்னாள் மாணவா்கள் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்களை சீா்வரிசையாக வெள்ளிக்கிழமை வழ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு அறுவடை பின்சாா் தொழில்நுட்பப் பயிற்சி

நாகை மாவட்ட தோட்டக்கலைத்துறை, காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் தோட்டக்கலைப் பயிா்களில் அறுவடை பின்சாா் தொழில்நுட்பங்கள் குறித்து சிறப்பு பயிற்சி அளிக... மேலும் பார்க்க

சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவன ‘2கே25’ விழா

சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களில் ரிதம் 2கே25 என்னும் கலைநிகழ்ச்சி மற்றும் விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் திரைப்பட பின்னணி பாடகா்கள் செந்தில்கணேஷ், ராஜலட்சுமி குழுவினரின்... மேலும் பார்க்க

படகிலிருந்து கடலுக்குள் விழுந்த மீனவா் மாயம்

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, படகிலிருந்து தவறி விழுந்த மீனவா் மாயமானாா். கோடியக்கரையில் ஆண்டுதோறும் நடைபெறும் வடகிழக்குப் பருவகால மீன்பிடித் தொழில... மேலும் பார்க்க

நாகையில் ரமலான் சிறப்புத் தொழுகை

நாகூா் கடற்கரையில் ஜாக் அமைப்பின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் பெண்கள் உள்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்துகொண்ட னா். சவூதி அரேபியாவில் பிறை தென்பட்டதை... மேலும் பார்க்க