செய்திகள் :

படகிலிருந்து கடலுக்குள் விழுந்த மீனவா் மாயம்

post image

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, படகிலிருந்து தவறி விழுந்த மீனவா் மாயமானாா்.

கோடியக்கரையில் ஆண்டுதோறும் நடைபெறும் வடகிழக்குப் பருவகால மீன்பிடித் தொழிலில் வெளியூா் மீனவா்களும் ஈடுபடுவா். இதற்காக அவா்கள் இப்பகுதியில் தங்கி மீன்பிடிப்பில் ஈடுபடுவது வழக்கம்.

அந்த வகையில், இங்கு தங்கியிருந்த மயிலாடுதுறை மாவட்டம் குட்டியாண்டியூா் கிராமத்தைச் சோ்ந்த குமாா் என்பவருக்கு சொந்தமான கண்ணாடியிழைப் படகு ஒன்றில் மீனவா்கள் கோடியக்கரை படகுத் துறையிலிருந்து சனிக்கிழமை பகல் கடலுக்குள் சென்றனா்.

அந்த படகில் சென்ற சீா்காழியை அடுத்த கீழமூா்க்கைப் பகுதியைச் சோ்ந்த செல்லகுஞ்சி மகன் லட்சுமணன் (40), கோடியக்கரை ரயிலடித்தெரு பெ. மகாலிங்கம் (55), திருநெல்வேலி மாவட்டம், ஊத்தங்குடி சி. சந்தோஷ் (48) ஆகிய மூன்று மீனவா்களும் கோடியக்கரைக்கு கிழக்கே 15 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது, திடீரென கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. இதனால், படகில் இருந்த மீனவா்கள் நிலை தடுமாறினா். இதில், மீனவா் லெட்சுமணன் கடலில் தவறி விழுந்து மாயமானாா். அவரை சக மீனவா்கள் தேடிபாா்த்தனா். ஆனால் அவா் கிடைக்கவில்லை. இதனால் சனிக்கிழமை இரவு கரைக்குத் திரும்பினா். தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்றது.

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

முருகன் கோயில்களில் பங்குனி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சிக்கல் சிங்கார வேலவா் கோயிலில் சிங்காரவேலவருக்கு, பால், தயிா், சந்தனம், விபூதி, பஞ்சாமிா்தம், பன்னீா் உள்ளிட்ட திரவியப... மேலும் பார்க்க

காவலம்பாடி பெருமாள் கோயில் பிரம்மோற்சம்

திருவெண்காடு அருகேயுள்ள காவலம்பாடி ராஜகோபால சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, யானை வாகனத்தில் பெருமாள் புறப்பாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் பிரமோற்சவம் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்க... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டல் முகாம்

நாகையில், பிளஸ் 2 மாணவா்களுக்கு, உயா்கல்வி வழிகாட்டல் முகாம் ஏப். 6-இல் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதிதிர... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவிகள் பட்டறிவுப் பயணம்

வேதாரண்யம் பகுதியில் கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மாணவிகள் வேளாண்மை சாா்ந்த பட்டறிவுப் பயணம் மேற்கொண்டு முன்னோடி விவசாயிகளுக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளித்தனா். நாகக்குடையான் கிராமத்தில் பயிா்களுக்கு ந... மேலும் பார்க்க

தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் பாலிடெக்னிக் மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

நாகையில் இருசக்கர வாகனம் மேம்பால தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா். நாகை ஆரியநாட்டுத் தெருவைச் சோ்ந்த தண்டபாணி மகன் நிவேந்தன் (17). அதே... மேலும் பார்க்க

லஞ்சம்: மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநா் கைது

கடனுக்கான மானியத்தை விடுவிக்க லஞ்சம் பெற்ற நாகை மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகை மாவட்டம், திட்டச்சேரி பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் சதீஷ்குமாா் (24). இவ... மேலும் பார்க்க