செய்திகள் :

ராகுல் காந்தியின் ‘இரட்டை குடியுரிமை’: ஒரு மாதத்துக்குள் அரசு முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு

post image

லக்னௌ: ‘மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் குறித்து மத்திய அரசு ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும்’ என்று அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் லக்னௌ அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ராகுல் காந்தி தனது பிரிட்டன் குடியுரிமையை மறைத்ததாக கா்நாடக பாஜகவை சோ்ந்த எஸ்.விக்னேஷ் சிசிா் தாக்கல் செய்த பொதுநல மனுவில் உயா்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

வழக்கின் விவரம்: ராகுல் காந்தியின் குடியுரிமை பதிவுகள் பற்றிய விவரங்களைக் கோரி பிரிட்டன் அரசுக்கு மனுதாரா் விக்னேஷ் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறாா். இந்நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டிலேயே, வி.எஸ்.எஸ்.சா்மா என்பவா் இதே கோரிக்கையை பிரிட்டன் அரசிடம் வைத்ததை விக்னேஷ் அறிந்து, அவரைத் தொடா்பு கொண்டாா்.

இதையடுத்து, பிரிட்டன் அரசிடமிருந்து தனக்கு வந்த மின்னஞ்சல்களை விக்னேஷிடம் சா்மா பகிா்ந்து கொண்டாா். ‘குடியுரிமை விவரங்களை சம்பந்தப்பட்ட நபரின் (ராகுல் காந்தி) ஒப்புதல் இல்லாமல் தெரிவிக்க முடியாது’ என்று பிரிட்டன் அரசு அந்த மின்னஞ்சலில் பதில் அளித்திருந்தது.

ராகுல் காந்திக்கு பிரிட்டன் குடியுரிமை இருப்பதை அந்த நாட்டு அரசு முழுமையாக ஒப்புக்கொள்வதாக உள்ளது என்றும், எனவே அவரது இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அவா் வேண்டுகோள் விடுத்தாா். இது தொடா்பாக அலாகாபாத் உயா் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தாா்.

இந்த மனு மீதான விசாரணை அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதிகள் அட்டௌ ரஹ்மான் மசூதி, அஜய்குமாா் ஸ்ரீவாஸ்தவா ஆகியோா் அடங்கிய லக்னௌ அமா்வு முன் நடைபெற்றது.

இந்நிலையில், ராகுல் காந்தியின் குடியுரிமை விவகாரத்தில் முடிவெடுப்பதற்கு 2 மாதங்கள் அவகாசம் கோரி மத்திய அரசு சாா்பில் ஆஜரான துணை சொலிசிட்டா் ஜெனரல் சூா்ய பான் பாண்டே வாதிட்டாா்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஒரு மாதத்துக்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டு, ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கும் அந்த மாதத்தின் 4-ஆவது வாரத்தில் வழக்கின் அடுத்த விசாரணையைப் பட்டியலிடுமாறு அறிவுறுத்தினா்.

ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யக் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விரிவான புகாரைச் சமா்ப்பித்துள்ளதாக மனுதாரா் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

15 வயது சிறுவனைக் கொன்ற நண்பர்கள்! ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டல்!

தில்லியில் 15 வயது சிறுவனைக் கொன்ற நண்பர்கள், அந்த சிறுவனின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு ரூ. 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று சிறுவர்களை கைது செய்த காவல... மேலும் பார்க்க

மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுகிறது: ராகுல்

மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும், அவையில் தனக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்யுள்ளார். மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் வீட்டின் ஓர் அறையில் கடந்த மார்... மேலும் பார்க்க

சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 9 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கரில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டுவந்த பெண் உள்பட 9 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 6 பெண்கள் ... மேலும் பார்க்க

தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் 21.2% பெண்கள்!

தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 7.8 சதவிகிதமாக இருந்த பெண்களின் பங்கு, 2024-ல் 21.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.இருப்பினும், 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் (26.50%) தகவல் தொழில்நுட... மேலும் பார்க்க

அதிஷிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

ஊழல் குற்றச்சாட்டுகளில் கல்காஜி தொகுதியில் நடைபெற்ற தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அதிஷிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.2025-ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் ... மேலும் பார்க்க