செய்திகள் :

மணிப்பூரில் இருந்து 27 மியான்மர் நாட்டவர் நாடு கடத்தல்

post image

மணிப்பூரில் சட்டவிரோதமாக நுழைந்த 27 மியான்மர் நாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

மணிப்பூர் மாநிலம், தெங்னௌபால் மாவட்டத்தில் உள்ள மோரேயில் உள்ள இந்தோ - மியான்மர் வாயிலில் ஒரு மைனர் உள்பட 27 பேர் அண்டை நாட்டு அதிகாரிகளிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்கள் இம்பாலில் உள்ள சஜிவா சிறையில் உள்ள வெளிநாட்டினர் தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டிருந்தனர்.

சிறை தண்டனை முடிந்த நிலையில் மியான்மர் நாட்டவர்களை இந்திய அதிகாரிகள் திருப்பி அனுப்பினர் என்று அதிகாரி ஒருவர் மேலும் கூறினார்.

வடகிழக்கு மாநிலத்தில் நடந்து வரும் இனக் கலவரத்துக்கு மியான்மரிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களே பெரும்பாலும் காரணம் என்கிற குற்றச்சாட்டு உள்ளது.

ஜார்க்கண்டில் கருகிய நிலையில் இரட்டை குழந்தைகள், பெண்ணின் சடலங்கள் மீட்பு

மணிப்பூரில் மைதேயி - குகி ஆகிய இரு பழங்குடி சமூகத்தினரிடையே நீடித்து வரும் மோதலில் இதுவரை 250 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இதையடுத்து முதல்வர் பதவியை பிரேன் சிங் அண்மையில் ராஜிநாமா செய்ததால் அங்கு பிப்ரவரி 13ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.

தில்லியில் சம்பளம் கொடுக்காததால் சக ஊழியரைக் கொன்ற சகோதரர்கள் கைது

சம்பளம் கொடுக்காததால் சக ஊழியரைக் கொலை செய்ததாக இரண்டு சகோதரர்களை தில்லி போலீஸார் கைது செய்தனர். தலைநகர் தில்லியில், சராய் ரோஹில்லாவின் ஹரிஜன் பஸ்தியில் உள்ள ரயில் பாதை அருகே கடந்த 17ஆம் தேதி அடையாளம்... மேலும் பார்க்க

6 நாள்களுக்குப் பிறகு நாக்பூரில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்

6 நாள்களுக்குப் பிறகு, நாக்பூரில் ஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கப்பட்டது. நாக்பூரில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து, கோட்வாலி, கணேஷ்பேத், தேஷில், லகட்கஞ்ச், பச்பாலி, சாந்தி நகர், சக்கர்தாரா, நந்தன்வன், ... மேலும் பார்க்க

திருமணமாகாத நக்ஸல்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி! சத்தீஸ்கர் அமைச்சரவை ஒப்புதல்

ராய்பூர்: சத்தீஸ்கரில் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நக்ஸல்களைக் கைது செய்ய உதவுவோர் மற்றும் அவர்களைப் பற்றிய துப்பு கொடுப்போர் எவரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அரசு தரப்பில் ந... மேலும் பார்க்க

உ.பி.: நிலத்தகராறில் கோழியைக் கொன்ற இருவர் மீது வழக்கு

உத்தரப் பிரதேசத்தில் நிலத்தகராறில் கோழியைக் கொன்றதாக இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம், கர்மல்பூர் கிராமத்தில் நிலத்தகராறில் தனது கோழியை செங்கற்கள் மற்றும் கற்களால் த... மேலும் பார்க்க

தெலங்கானாவில் திடீரென வெடித்த குப்பைத் தொட்டி- தூய்மைப் பணியாளர் பலி

தெலங்கானாவில் குப்பைத் தொட்டியில் இருந்து திடீரென மர்மபொருள் வெடித்ததில் தூய்மை பணியாளர் பலியானார். தெலங்கானா மாநிலம், குசாய்குடா பகுதியில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை அகற்... மேலும் பார்க்க

கணவருடன் விவாகரத்து! 11 வயது மகனை கழுத்தறுத்து கொன்ற தாய்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் 11 வயது மகனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய் ஒருவர் கத்தியால் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில், அவரின் மே... மேலும் பார்க்க