செய்திகள் :

நிவின் பாலி - நயன்தாராவின் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படப்பிடிப்பு நிறைவு!

post image

நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் நிவின் பாலி ஆகியோர் நடித்து வந்த ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இயக்குநர்கள் சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் ராய் ஆகியோரின் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் நிவின் பாலியின் நடிப்பில் டிராமாவாக உருவாகி வரும் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததாக அதன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, வெளியான விடியோ பதிவை இந்த திரைப்படத்தின் கதாநாயகன், கதாநாயகி மற்றும் இயக்குநர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் ஒன்றாக பகிர்ந்துள்ளனர்.

இதையும் படிக்க: கிரிக்கெட்டர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவி மோகன்!

நடிகர் நிவின் பாலியின் பாலி ஜூனியர் பிக்சர்ஸ் மற்றும் மாவெரிக் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைக்கின்றார்.

முன்னதாக, கடந்த 2019 ஆம் ஆண்டு மலையாள இயக்குநர் தயான் ஸ்ரீனிவாசனின் ‘லவ் ஆக்‌ஷன் டிராம்’ திரைப்படத்தில் நயன்தாராவும், நிவின் பாலியும் ஜோடியாக நடித்திருந்தனர்.

அதன் பின்னர், தற்போது ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ திரைப்படத்தில் அவர்கள் இணைந்துள்ளது ஜனவரில் வெளியிடப்பட்ட முதல் பார்வை போஸ்டரில் உறுதியானது.

மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர்கள் தீப்தி, சுபத்ரா ராபர்ட் மற்றும் கிரண் கொண்டா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல்: கடைசி ஓவரில் தில்லி கேபிடல்ஸ் த்ரில் வெற்றி!

விசாகப்பட்டினம்: நடப்பு ஐபிஎல் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயித்த 210 ரன்கள் இலக்கைதில்லி கேபிடல்ஸ் 19.3 ஓவர்களில் எட்டி முதல் வெற்றி... மேலும் பார்க்க

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வா? - அன்புமணி கேள்வி

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச... மேலும் பார்க்க

டி-மார்ட் போன்ற நிறுவனங்களை தடை செய்யாவிட்டால் விரைவில் போராட்டம்: விக்ரமராஜா

சேலம் : டி-மார்ட் போன்ற நிறுவனங்களை தடை செய்யாவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்ரமராஜா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். சேலம் ... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி நாளை ஆலோசனை

சென்னை: தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை (மாா்ச் 24) ஆலோசனை நடத்தவுள்ளாா்.த... மேலும் பார்க்க

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்: விஜய்

சென்னை: பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம... மேலும் பார்க்க

ஏப். 6-ல் உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை முதல்வா் திறந்து வைக்கிறாா்!

நீலகிரி: நாட்டிலேயே முதன் முறையாக பழங்குடியினா்களுக்கு என 50 படுக்கை வசதிகளுடன், மலை பிரதேசத்தில் அதிநவீன 700 படுக்கைகள் கொண்ட உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை ஏப்ரல் 6 ஆம் தேதி முதல்வர் மு.க.... மேலும் பார்க்க