செய்திகள் :

ஆஸ்கர் வென்ற பாலஸ்தீன இயக்குநரைக் கைது செய்த இஸ்ரேல் ராணுவம்!

post image

ஆஸ்கர் விருது வென்ற பாலஸ்தீன இயக்குநர் ஒருவரை ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தில் குடியேறிய இஸ்ரேலியர்கள் தாக்கியதைத் தொடர்ந்து, அவர் இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

சிறந்த ஆவணத் திரைப்படம் பிரிவில் ஆஸ்கா் விருதை வென்ற ‘நோ அதா் லேண்ட்’ படத்தை யுவால் ஆபிரஹாம், பசெல் ஆட்ரா, ஹம்தன் பலால், ராச்செல் ஸோர் ஆகிய 4 பேர் இணைந்து இயக்கினர். இதில், யுவால் இஸ்ரேலைச் சேர்ந்த பத்திரிகையாளர்.

2019 மற்றும் 2023 ஆண்டுகளுக்கு இடையில் படமாக்கப்பட்ட இந்தப் படம் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஒரு பாலஸ்தீன சமூகத்தின் அழிவைக் காட்டியது. இஸ்ரேல் அந்த இடத்தை தாக்குதல் மண்டலமாக அறிவித்த பின்னர் அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்தது பற்றி பேசிய இப்படம் உலகம் முழுவதும் பல்வேறு விருதுகளை வென்றுள்ளது.

இப்படத்தின் 4 இயக்குநர்களில் ஒருவரான ஹம்தன் பலால் இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்டு இஸ்ரேல் ராணுவத்தால் நேற்று கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க | ஆஸ்கரில் வென்ற இஸ்ரேல்-பாலஸ்தீன கூட்டணி

அவருடன் சேர்த்து, 3 பாலஸ்தீனர்கள் சூசியா என்ற கிராமத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு ராணுவ முகாமில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும் இயக்குநரின் வழக்குரைஞர் தெரிவித்தார்.

பலால் கைது செய்யப்பட்டபோது அங்கிருந்த மற்றொரு இயக்குநரான பசேல் அட்ரா கூறுகையில், “20-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கிராமத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் முகமூடி அணிந்தும், துப்பாக்கிகளை ஏந்தியும், இஸ்ரேல் ராணுவ உடையிலும் இருந்தனர்.

இங்கு வந்த ராணுவ வீரர்கள் துப்பாக்கி முனையில் பாலஸ்தீன மக்களை மிரட்டினர். அவர்களுடன் இருந்த மக்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

இயக்குநர் ஹம்தன் பலாலை கைது செய்து வாகனத்தில் ஏற்றும் இஸ்ரேல் ராணுவம்

நாங்கள் ஆஸ்கர் விருது வென்று திரும்பிய நாள் முதல் தினமும் இங்கு எங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது. படம் எடுத்ததற்காக எங்களை அவர்கள் பழிவாங்குவதைப் போல இருக்கிறது. இது எங்களுக்கு தண்டனையைப் போல உணர்கிறோம்” என்றார்.

இதையும் படிக்க | இஸ்ரேல் பிணைக் கைதிகளைப் பிணமாகப் பார்ப்பீர்கள்! ஹமாஸ் விடுத்துள்ள எச்சரிக்கை

இஸ்ரேல் ராணுவம் இந்தக் கைது சம்பவம் குறித்துப் பேசியபோது, “ராணுவ வீரர்களின் மீது கற்களை வீசிய பாலஸ்தீனர்களை நாங்கள் கைது செய்தோம். மேலும், பாலஸ்தீன் - இஸ்ரேல் மக்களுக்கு இடையிலான மோதலில் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்ட ஒரு இஸ்ரேலியரையும் கைது செய்தோம். இஸ்ரேல் போலீஸ் அவர்களிடம் விசாரணை நடத்தவுள்ளனர்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

துருக்கி: போராட்டத் தடை ஏப்ரல் வரை நீட்டிப்பு

துருக்கி தலைநகா் அங்காராவில் போராட்டம் நடத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அங்காரா ஆளுநா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

குறைந்தபட்ச திருமண வயதை குறைக்கும் நேபாள அரசு! காரணம்?

நேபாளத்தில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 20ல் இருந்து 18 ஆகக் குறைக்கப் போவதாகவும், அதற்குக் கீழ் திருமணம் செய்தால் அவர்களுக்கு தண்டனை விதிக்க வழி வகுக்கும் சட்டத்தை இயற்றவும் திட்டமிடப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

எலான் மஸ்க் பரிதாபத்திற்குரியவர்: மகள் ஜென்னா கருத்து!

உலகின் முன்னணி தொழிலதிபரும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க்கின் மகளான விவியன் ஜென்னா வில்சன் மஸ்க் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்கிற்கு கடந்த 20 ஆண்டுகளில் மொத்தம் 4 மனைவிகள் மற்... மேலும் பார்க்க

மின்சார கார்கள் விற்பனையில் டெஸ்லாவை ஓரங்கட்டியுள்ள சீன நிறுவனம்!

மின்சார கார்கள் விற்பனையில் டெஸ்லாவை விஞ்சி முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ளது சீன நிறுவனமான ‘பி.ஒய்.டி’.அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு நெருக்கமானவராக விளங்கும் எலான் மஸ்க் தலைமையில் அமெரிக்க அரசு செயல... மேலும் பார்க்க

இப்படி ஒரு தொழிலில் குதிக்கப் போகிறாரா எலான் மஸ்க்?

டெஸ்லா கார், விண்வெளித் துறையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கம் என தனது தொழிலை பன்முகத்துக்குக் கொண்டு சென்றிருக்கும் தொழிலதிபா் எலான் மஸ்க் அடுத்து உணவகத் தொழிலில் நுழையப் போவதாகத... மேலும் பார்க்க

கனடா தேர்தலில் இந்தியாவும் சீனாவும் தலையிட முயற்சிக்கும்: உளவுத்துறை

கனடாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இந்தியாவும் சீனாவும் தலையிட முயற்சிக்கும் என்று அந்நாட்டின் உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.கனடா நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்த அந்நாட்டு பிரதமர் மார்க் ... மேலும் பார்க்க