செய்திகள் :

`கடலோரம் வாழும் மக்களுக்கு விழிப்புணர்வு இருக்க வேண்டும்' - ரஜினி வெளியிட்ட வீடியோ! காரணம் என்ன?

post image

மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) உருவாக்கப்பட்டு 56 ஆண்டுகள் ஆனதையொட்டி, கடந்த மார்ச் 7 ஆம் தேதி குஜராத் மற்றும் மேற்குவங்க மாநிலங்களிலிருந்து இரு பிரிவுகளாக சிஐஎஸ்எஃப் வீரர்களின் சைக்கிள் பேரணி தொடங்கியது. இதனை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்திலிருந்து காணொளி வாயிலாக தொடக்கி வைத்தார். மேற்கு வங்கத்தில் தொடங்கிய பேரணி 25 நாள்கள் கடந்து வரும் 31 ஆம் தேதியன்று கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவிடத்தில் நிறைவடைய உள்ளது.

விழிப்புணர்வு பேரணி
விழிப்புணர்வு பேரணி

கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க, கடலோரம் வாழும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் (CISF) சைக்கிள் பேரணியை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்தான் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "நம் நாட்டின் பெயர், நிம்மதி, சந்தோஷம் அதனை கெடுக்க பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டுக்குள் புகுந்து கோரசம்பவங்கள் செய்வார்கள்.

அதற்கு உதாரணம் மும்பையில் 26/11ல் நடந்த கோர சம்பவம். கிட்டத்தட்ட 175 பேரின் உயிரை வாங்கிவிட்டது. கடலோரம் வாழும் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து சந்தேகத்துக்குரிய நபர்கள் யாரும் நடமாடினால் அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த 100 சிஐஎஸ்எஃப் வீரர்கள் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கிலோமீட்டர் கடந்து மேற்கு வங்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரை பேரணி செல்கின்றனர். அவர்கள் உங்களின் பகுதிகளுக்கு வரும்போது அவர்களை வரவேற்று, முடிந்தால் அவர்களுடன் கொஞ்சம் தூரம் சென்று வாருங்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`என் வேலையை காலி பண்ணி விட்டுடுவீங்க போல' என்றார் வடிவேலு சார் - நடிகை ராதா பேட்டி

23 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்திருக்கிற முழு நீள நகைச்சுவைத் திரைப்படம் 'சுந்தரா டிராவல்ஸ்'. இப்போதும் ஓட்டை ஒடிசலான ஒரு பேருந்தைக் கண்டால் “என்னது சுந்தரா டிராவல்ஸ் பஸ்ஸ... மேலும் பார்க்க

L2: Empuraan: "Lucifer 3-ல சிவகார்த்திகேயன் கூட ஒர்க் பண்ணலாம்" - Mohanlal, Prithviraj Pressmeet

Empuraan: "நம்ம பட நிகழ்ச்சிக்கு பிரதீப் ரங்கநாதன் ஆங்கர் பண்றாரான்னு..." - ப்ரித்விராஜ் கலகலவேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!Link : Part 01 : https://tinyurl.com/Vett... மேலும் பார்க்க

Amy Jackson: 'வண்ணம் நீயே, வானம் நீயே' நடிகை எமி ஜாக்சன் - எட் வெஸ்ட்விக் தம்பதிக்கு ஆண் குழந்தை!

`மதராசப்பட்டினம்' படத்தில் துரையம்மாவாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன். அதன்பிறகு `ஐ', `2.0', `தெறி', `கெத்து', `தங்க மகன்' எனப் பல படங்களில் நடித்தார். அதன் பிறக... மேலும் பார்க்க

`மீண்டு வருவேன்' - மரணத்தோடு போராடிய ஷிஹான் ஹுசைனி உயிரிழந்தார்!

கராத்தே ஹுசைனி என்று அறியப்படும் ஷிஹான் ஹுசைனி ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். அவரது சிகிச்சைக்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பிலும் மற்ற சிலர் சார்பிலும்... மேலும் பார்க்க

Vijay: "விஜய் சார் சொன்ன அந்த வார்த்தை..." - விஜய்யைச் சந்தித்தது குறித்து பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான `டிராகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.'கோமாளி', 'லவ் டுடே', `டிராகன்' என தொடர்ந்து ஹிட் திரைப்படங்களைக் கொடுத்து கோலிவுட்டை கலக்கி வர... மேலும் பார்க்க

Vijay: "உங்களுக்குச் சொன்னா புரியாது சார்" - விஜய்யைச் சந்தித்தது குறித்து அஸ்வத் மாரிமுத்து

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான `டிராகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.'ஓ மை கடவுளே' படத்தை இயக்கி நல்ல வரவேற்பைப் பெற்ற, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவிற்கு இப்படம் டப... மேலும் பார்க்க