செய்திகள் :

திறமை மீது நம்பிக்கை இருக்கிறது: ஆட்ட நாயகன் அசுதோஷ் ஷர்மா

post image

ஐபிஎல் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் சோ்க்க, தில்லி 19.3 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 211 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

இக்கட்டான சூழலில் தில்லி வீரா் அசுதோஷ் சா்மா அதிரடியாக விளையாடி அணியை ‘த்ரில்’ வெற்றிக்கு வழிநடத்தினாா்.

முதல் 20 பந்துகளில் 20 ரன்களும் அடுத்த 11 பந்துகளில் 46 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.

ஆட்ட நாயகன் விருதுபெற்ற பின்னர் அசுதோஷ் சர்மா பேசியதாவது:

ஷிகர் தவானுக்கு சமர்ப்பணம்

கடந்த சீசன்களில் சில இன்னிங்ஸ்களில் வெற்றிகரமாக இலக்கை முடிக்கவில்லை. ஓராண்டு முழுவதும் இதை எப்படி செய்வதென நான் இதில் கவனத்தை செலுத்தினேன்.

நான் கடைசி ஓவர் வரை விளையாடினால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

விப்ராஜ் நன்றாக விளையாடினார். அவரை அதிராடியாக விளையாடும்படி கூறினேன். அழுத்தத்திலும் அவர் அமைதியாக இருந்தார்.

இந்த விருதை எனது ஆலோசகர் ஷிகர் தவானுக்கு சமர்ப்பிக்கிறேன்.

கடைசி சீசன் எனக்கு சிறப்பாக இருந்தது. அது எனது வரலாறாகவிட்டது. அதிலிருந்து நான் நேர்மறையான விஷயங்களை எடுத்துக்கொண்டு பலவீனங்களை சரிசெய்தேன். உள்ளூர் கிரிக்கெட்டில் இதை சோதித்து பார்த்தேன்.

நான் நம்பிக்கையுடன் இருந்தேன். அது ஆட்டத்தின் ஒரு பகுதி. மோஹித் ஒரு ரன் எடுத்தால் நான் சிக்ஸர் அடிக்கலாம் என இருந்தேன். எனது திறமை மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன் என்றார்.

கடந்த சீசனில் சுதோஷ் சர்மாவின் ஐபிஎல் இன்னிங்ஸ்:

குஜராத் அணிக்கு எதிராக 31 (17)

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக 33* (15)

ராஜஸ்தான் அணிக்கு எதிராக 31 (16)

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 61 (28)

ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப்

குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 5ஆவது ஆட்டத்தில் பஞ்சாப், குஜ்ராத் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் டைட்ட... மேலும் பார்க்க

16 சிக்ஸர்கள், 22 பவுண்டரிகள்: பஞ்சாப் 243 ரன்கள் குவிப்பு!

பஞ்சாப் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸுக்கு 244 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ஐபிஎல் தொடரில் 5ஆவது போட்டியில் பஞ்சாப், குஜ்ராத் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை ... மேலும் பார்க்க

முதல் போட்டி தோல்வி குறித்து அதிகம் கவலைப்படவில்லை: கேகேஆர் பயிற்சியாளர்

ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து அதிகம் கவலைப்படவில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அண்மையி... மேலும் பார்க்க

நான் இம்பாக்ட் பிளேயர் கிடையாது; என்ன சொல்கிறார் எம்.எஸ்.தோனி?

ஐபிஎல் தொடரில் பின்பற்றப்படும் இம்பாக்ட் பிளேயர் விதி குறித்து மகேந்திர சிங் தோனி மனம் திறந்துள்ளார்.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அண்மையில் தொடங்கியது. இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அகமதாபாதில் இ... மேலும் பார்க்க

தமனின் இசையுடன் தொடங்கும் ஹைதராபாத் - லக்னெள போட்டி!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கு முன்னதாக தமனின் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் 18-ஆவது சீசன் கடந்த சனிக்கிழமை கொல்கத்தாவில் கோலாகலம... மேலும் பார்க்க

தாய்மொழி இனிது! தோனி கூறியதென்ன?

தாய்மொழியில் வர்ணனையைக் கேட்பது பள்ளி பருவத்தை நினைவூட்டுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.ஐபிஎல் 18-ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை... மேலும் பார்க்க