செய்திகள் :

நான் இம்பாக்ட் பிளேயர் கிடையாது; என்ன சொல்கிறார் எம்.எஸ்.தோனி?

post image

ஐபிஎல் தொடரில் பின்பற்றப்படும் இம்பாக்ட் பிளேயர் விதி குறித்து மகேந்திர சிங் தோனி மனம் திறந்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அண்மையில் தொடங்கியது. இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அகமதாபாதில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. மும்பைக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸை சிஎஸ்கே 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதையும் படிக்க: ருதுராஜ் எடுக்கும் முடிவுகளின் பின்னணியில் நான் இருக்கிறேனா? எம்.எஸ்.தோனி கூறியதென்ன?

மனம் திறந்த எம்.எஸ்.தோனி

இந்த ஐபிஎல் சீசனை சிஎஸ்கே வெற்றியுடன் தொடங்கியுள்ள நிலையில், அந்த அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இம்பாக்ட் பிளேயர் விதி குறித்து பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இம்பாக்ட் பிளேயர் விதி தொடர்பாக ஜியோஸ்டாரில் எம்.எஸ்.தோனி பேசியதாவது: ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி அறிமுகப்படுத்தப்பட்டபோது, அந்த விதி உண்மையில் தேவையற்றதாக உணர்ந்தேன். ஒரு விதத்தில் இம்பாக்ட் பிளேயர் விதி எனக்கு உதவியது. ஆனால், அதே நேரத்தில் அந்த விதி எனக்கு தேவையற்றதாகவும் இருந்தது. நான் போட்டிகளில் தொடர்ந்து விக்கெட் கீப்பிங் செய்கிறேன். நான் இம்பாக்ட் பிளேயர் கிடையாது. நான் தொடர்ந்து ஆட்டத்தில் ஈடுபட வேண்டிய அவசியமிருக்கிறது.

இதையும் படிக்க: மின்னல் வேகம், கூர்மையான பார்வை; எம்.எஸ்.தோனியின் ஸ்டம்பிங்கை புகழ்ந்த மேத்யூ ஹைடன்!

இம்பாக்ட் பிளேயர் விதியினால் அதிக ரன்கள் குவிக்க முடிவதாக நிறைய பேர் கூறுகிறார்கள். ஆனால், ஆடுகளங்களின் தன்மை மற்றும் வீரர்கள் எந்த அளவுக்கு நன்றாக விளையாடுகிறார்கள் என்பதைப் பொருத்தே அதிக ரன்கள் வருவதாக நான் நம்புகிறேன். கூடுதல் பேட்ஸ்மேனால் மட்டுமே அதிக ரன்களை அணிகள் குவிக்கின்ற எனக் கூறிவிட முடியாது. நாம் எப்படி சிந்திக்கிறோம் என்ற மனநிலையைப் பொருத்தே போட்டியில் ரன்கள் குவிப்பது அமைகிறது. கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைப்பதால், அணிகள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க வேண்டும் என்ற மனநிலைக்கு வருகின்றனர் என்றார்.

இம்பாக்ட் பிளேயர் விதியை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா இருவரும் ஏற்கனவே விமர்சித்திருந்தனர். இம்பாக்ட் பிளேயர் விதி ஆல்ரவுண்டர்களின் வளர்ச்சியைத் தடுப்பதாக அவர்கள் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப்

குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 5ஆவது ஆட்டத்தில் பஞ்சாப், குஜ்ராத் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் டைட்ட... மேலும் பார்க்க

16 சிக்ஸர்கள், 22 பவுண்டரிகள்: பஞ்சாப் 243 ரன்கள் குவிப்பு!

பஞ்சாப் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸுக்கு 244 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ஐபிஎல் தொடரில் 5ஆவது போட்டியில் பஞ்சாப், குஜ்ராத் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை ... மேலும் பார்க்க

முதல் போட்டி தோல்வி குறித்து அதிகம் கவலைப்படவில்லை: கேகேஆர் பயிற்சியாளர்

ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து அதிகம் கவலைப்படவில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அண்மையி... மேலும் பார்க்க

திறமை மீது நம்பிக்கை இருக்கிறது: ஆட்ட நாயகன் அசுதோஷ் ஷர்மா

ஐபிஎல் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் சோ்க்க, தில்லி 19.3 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 211 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இக்... மேலும் பார்க்க

தமனின் இசையுடன் தொடங்கும் ஹைதராபாத் - லக்னெள போட்டி!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கு முன்னதாக தமனின் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் 18-ஆவது சீசன் கடந்த சனிக்கிழமை கொல்கத்தாவில் கோலாகலம... மேலும் பார்க்க

தாய்மொழி இனிது! தோனி கூறியதென்ன?

தாய்மொழியில் வர்ணனையைக் கேட்பது பள்ளி பருவத்தை நினைவூட்டுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.ஐபிஎல் 18-ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை... மேலும் பார்க்க