செய்திகள் :

திருமணமாகாத நக்ஸல்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி! சத்தீஸ்கர் அமைச்சரவை ஒப்புதல்

post image

ராய்பூர்: சத்தீஸ்கரில் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நக்ஸல்களைக் கைது செய்ய உதவுவோர் மற்றும் அவர்களைப் பற்றிய துப்பு கொடுப்போர் எவரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அரசு தரப்பில் நிலம் வழங்கப்படுவதுடன் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற நிவாரணத் தொகையும் அதிகரிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, நக்ஸல் நக்ஸல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சரணடைந்தால் அவர்களுக்கு நிதியுதவியாக அரசு தரப்பிலிருந்து ரூ. 50,000 வழங்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு சரணடையும் நக்ஸல்கள் தங்களிடமுள்ள ஆயுதங்களை காவல் துறையிடம் ஒப்படைக்கும்போது, அதற்கான நிதியுதவியாக ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை வழங்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நக்ஸல் அமைப்பைச் சேர்ந்த திருமணமாகாதவர்கள் சரணடைந்தால், அவர்கள் திருமணம் செய்துகொள்ள நிதியுதவியாக சரணடைந்த 3 ஆண்டுகளுக்குள் ரூ. 1 லட்சம் வழங்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா சுரங்கத்தில் மற்றொரு உடல் கண்டுபிடிப்பு! ஒரு மாதத்தைக் கடந்த மீட்புப் பணி!

தெலங்கானாவில் நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் பலியான இரண்டாவது தொழிலாளரின் உடலை மீட்புக் குழுவினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை கண்டுபிடித்துள்ளனர்.தொடர்ந்து, அந்த உடலை மீட்பதற்கான பணிகள... மேலும் பார்க்க

நாகபுரி வன்முறை: முக்கிய குற்றவாளியின் வீடு இடிப்பு

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் அண்மையில் நிகழ்ந்த வன்முறையில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள ஃபாஹிம் கானின் இரண்டு மாடி வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனா். உள்ளாட்சி நிா்வாகத்திடம் உரிய... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமை முயற்சி; தப்புவதற்காக கீழே குதித்த இளம்பெண் படுகாயம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்புவதற்காக ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த 23 வயது பெண் படுகாயமடைந்தாா். ஹைதராபாதில் உள்ள மருத்துவமனையில் அவா் சிகிச்சைக்காக அனுமதிக்கப... மேலும் பார்க்க

சீனாவில் இருந்து 8 லட்சம் டன் உரம் இறக்குமதி

புது தில்லி: நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை சீனாவிலிருந்து 8.47 லட்சம் டன் உரத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த பிப்ரவரி மாதம்... மேலும் பார்க்க

கல்வித்துறை ஆா்எஸ்எஸ் வசம் சென்றால் இந்தியாவை அழித்துவிடுவாா்கள்: ராகுல்

புது தில்லி: கல்வித்துறை முழுமையாக ஆா்எஸ்எஸ் வசம் சென்றால் இந்தியா என்ற நாட்டையே அழித்துவிடுவாா்கள் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மாணவா்கள் மத்தியில் பேசினாா். தேசிய கல்விக் கொள்கை... மேலும் பார்க்க

ராகுல் காந்தியின் ‘இரட்டை குடியுரிமை’: ஒரு மாதத்துக்குள் அரசு முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு

லக்னௌ: ‘மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் குறித்து மத்திய அரசு ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும்’ என்று அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் லக்னௌ அமா்வு திங்கள்க... மேலும் பார்க்க