செய்திகள் :

பங்குச் சந்தை: 7-வது நாளாக ஏற்றத்துடன் தொடக்கம்!

post image

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து 7-வது நாளாக செவ்வாய்க்கிழமை காலை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.

இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியவுடன், சென்செக்ஸ் 311.90 புள்ளிகள் உயர்ந்து 78,296.28 புள்ளிகளாக வர்த்தகமானது. அதேபோல், நிஃப்டியும் 93.15 புள்ளிகள் உயர்ந்து 23,751.50 ஆக வர்த்தகமாகி வருகிறது.

மேலும், காலை 10 மணி நிலவரப்படி சென்செக்ஸும் நிஃப்டியும் தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்படுகிறது.

இதையும் படிக்க : தங்கம் விலை தொடர்ந்து குறைவு! இன்றைய நிலவரம்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வருகின்ற ஏப்ரல் 2-ஆம் தேதி புதிய வரிக் கொள்கையை அமல்படுத்தவுள்ளார். இதனிடையே, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடுகள் செய்வதால் பங்குச் சந்தை ஏற்றத்துடன் நீடிக்கிறது.

அல்ட்ராடெக் சிமென்ட், எச்.சி.எல். டெக், டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் விற்பனையாகி வருகிறது.

கடந்த 6 நாள்களாக இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ.85.74-ஆக முடிவு!

மும்பை: இறக்குமதியாளர்களிடமிருந்து டாலருக்கான தேவை அதிகரித்த நிலையில், இந்திய ரூபாயின் மீதான அழுத்தம் அதிகரித்ததால் இன்றைய சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாய் 13 காசுகள் சரிந்து ரூ.85.7... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 32.81 புள்ளிகள் உயர்வு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் தொடர்ந்து 7-வது அமர்வாக உயர்ந்த நிலையில், முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்ததால் பங்குச் சந்தை ஓரளவு உயர்ந்து முடிந்தது.வர்த்தக நே... மேலும் பார்க்க

தொடர்ந்து 7-வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை!

தொடர்ந்து 7-வது நாளாக பங்குச் சந்தை இன்று(மார்ச் 25) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,296.28 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 10 மணியளவில்,... மேலும் பார்க்க

அதிநவீன கண் மருத்துவமனை அமைக்க ரூ.110 கோடி முதலீடு செய்யும் சங்கரா அறக்கட்டளை!

புதுதில்லி: பாட்னாவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை அமைக்க சங்கரா கண் அறக்கட்டளை ரூ.110 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.பாட்னாவின் உள்ள கன்கர்பக்கில் 1.60 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ள... மேலும் பார்க்க

வெங்காயத்தின் மீதான 20% ஏற்றுமதி வரி நீக்கம்: சிவராஜ் சிங் சௌகான்

புதுதில்லி: ஏப்ரல் 1 முதல் வெங்காய ஏற்றுமதி மீதான 20 சதவிகித சுங்க வரியை திரும்பப் பெறும் மத்திய அரசின் முடிவு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் என்றார் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்.இனி வெங்காய ஏற்... மேலும் பார்க்க

மஹிந்திராவின் புதிய மின்சார கார்! ஒருமுறை சார்ஜ் செய்தால் 682 கி.மீ. பயணம்!

மஹிந்திராவின் பிஇ - 6 என்ற புதிய மின்னணு வாகனத்தை முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை மஹிந்திரா நிறுவனம் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகமான இந்த வாகனம், ரூ. 18.90 லட்சத்... மேலும் பார்க்க